திருச்சி 23வது வட்ட திமுக மற்றும் இளைஞர் அணி சார்பில் மறைந்த முன்னாள் கவுன்சிலர் கஸ்தூரி ரங்க நாதனின் 17 ஆம் ஆண்டு நினைவு தினத்தை முன்னிட்டு திருச்சி குறத்தெரு பகுதியில் திமுக திருச்சி மாவட்ட இளைஞரணி துணை அமைப்பாளர் கஸ்தூரி ஜானகிராமன் ஏற்பாட்டில் பள்ளி மாணவ மாணவிகளுக்கு நலத்திட்ட உதவிகள் மற்றும் பொதுமக்களுக்கு அன்னதானத்தை திருச்சி மாவட்ட செயலாளர் வைரமணி மற்றும் இளைஞர் அணி மாநில அமைப்பாளர் ஆனந்த் ஆகியோர் வழங்கினர்.

முன்னதாக மறைந்த முன்னாள் கவுன்சிலர் கஸ்தூரி ரங்கநாதனின் உருவப் படத்திற்கு மலர் தூவி அஞ்சலி செலுத்தினர். இந்நிகழ்ச்சியில் பகுதி செயலாளர் நாகராஜ், அவைத்தலைவர் முத்துகிருஷ்ணன் வட்ட செயலாளர் ரவிச்சந்திரன் மற்றும் வட்டக் கழக நிர்வாகிகள் பொதுமக்கள் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *