மறைந்த முன்னாள் தமிழக முதலமைச்சர் ஜெயலலிதா. கடந்த 2016-ம் ஆண்டு டிச.5-ம் தேதி மறைந்தார். அவரின் 7-ம் ஆண்டு நினைவு நாளான இன்று முன்னாள் முதல்வர் ஓ பன்னீர்செல்வம் மலர் தூவி அஞ்சலி செலுத்தினார். அதனைத் தொடர்ந்து தமிழக முழுவதும் உள்ள அரசியல் கட்சியினர் பொதுமக்கள் உள்ளிட்டோர் அவரது படத்திற்கு மலர் தூவி அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.

அதன் ஒரு பகுதியாக முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் ஏழாம் ஆண்டு நினைவு நாளை ஒட்டி திருச்சி மாநகர் மாவட்ட ஓ.பி.எஸ்.அணி சார்பில் ஜெயலலிதா படத்துக்கு அமைப்பு செயலாளரும் முன்னாள் அமைச்சருமான வெல்லமண்டி நடராஜன் தலைமையில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

அருகில் அவைத்தலைவர் வக்கீல் ராஜ்குமார், ஜெயலலிதா பேரவை மாவட்ட செயலாளர் வெல்லமண்டி ஜவஹர்லால் நேரு,பால்ராஜ் ராஜேந்திரன் அருணாச்சலம், எடத்தெரு சந்திரன், செங்கல் மணி உள்பட பலர் உள்ளனர்.

அதனைத் தொடர்ந்து திருச்சி தென்னூர் பகுதியில் உள்ள அலுவலக முன்பு ஏழை எளிய மக்களுக்கு அன்னதானத்தை முன்னாள் அமைச்சர் வெல்லமண்டின் நடராஜன் வழங்கினார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

தற்போதைய செய்திகள்