மறைந்த தமிழக முதல்வர் ஜெயலலிதாவின் 76 ஆவது பிறந்த நாளை முன்னிட்டு, அதிமுக திருச்சி மாநகர் மாவட்ட கழகம் சார்பில், மாவட்ட கழக செயலாளர் சீனிவாசன் தலைமையில், திருச்சி நீதிமன்றம் அருகே உள்ள எம்ஜிஆர் சிலை முன்பு அமைக்கப்பட்டு இருந்த ஜெயலலிதா உருவப்படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தப்பட்டது.

அதனைத் தொடர்ந்து பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கி பிறந்தநாள் விழா கொண்டாடப்பட்டது. இந்நிகழ்வில் அம்மா பேரவை மாநில துணைச் செயலாளர் அரவிந்தன்,

மாணவரணி மாவட்ட செயலாளர் இப்ராம்ஷா,மகளிர் அணி செயலாளர் நசீமா பாரிக், திருச்சி மாநகர் மாவட்ட மகளிர் அணி இணைச் செயலாளர் ஜெயஸ்ரீ, திருச்சி மாநகர் மாவட்ட மாணவரணி துணைத் தலைவர் வழக்கறிஞர் சேது மாதவன், பகுதி கழக செயலாளர்கள் அன்பழகன், முஸ்தபா, பொன்னர் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

தற்போதைய செய்திகள்