கடந்த 1999ம் ஆண்டு இந்தியாவிற்கும், பாகிஸ்தானிற்கும் இடையே நடைபெற்ற கார்கில் போரின்போது யுத்தகளத்தில் எதிரிகளின் 2 முகாம்களை ஏவுகணையால் தாக்கி வீழ்த்தி, எதிரிகளை கொன்றொழித்து வீரமரணம் அடைந்த திருச்சியைச் சேர்ந்த மேஜர் சரவணனின் 26வது ஆண்டு நினைவுதினம் இன்று அனுசரிக்கப்பட்டது.
அவரது நினைவுதினத்தையொட்டியும், கார்கில் போரில் உயிர்நீத்த இதர வீரர்கள் மற்றும் தியாகிகளை நினைவுகூறும் வகையில் திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் சாலையில் உள்ள மேஜர் சரவணன் நினைவிடத்தில் மலர்வளையம் வைத்து மரியாதை செலுத்தப்பட்டது.
மாவட்ட ஆட்சியர் பிரதீப்குமார், மாநகராட்சிமேயர் அன்பழகன், மண்டல தலைவர் துர்காதேவி, ஸ்டேஷன் கமாண்டர் கர்னல் சுதீப் ஷட்டர்ஜி, குரூப் கமாண்டர் கர்னல் விஜயகுமார், தமிழ்நாடு சிறப்புபட்டாலியன் கமாண்டன்ட் ஆனந்தன், புனிதவளனார் கல்லூரி முதல்வர் அருட்தந்தை மரியதாஸ் மற்றும் மேஜர் சரவணன் திருச்சி மாவட்ட இருசக்கர வாகன பழுது பார்ப்போர் நலச் சங்கத்தின் நிர்வாகிகள் உள்ளிட்ட பலரும் பங்கேற்று நினைவிடத்தில் மலர் வளையம் வைத்தும், மலர் தூவியும் மரியாதை செலுத்தினார்கள்.