1999இல் பாகிஸ்தானுக்கு எதிராக நடைபெற்ற கார்கில் போரில் திருச்சியை சார்ந்த மேஜர் சரவணன் வீர அடைந்தார் அவர்க்கு இந்திய அரசு பாட்டாலிக்கின் கதாநாயகன் என்றும் நம் நாட்டின் உயரிய விருதான வீர் சக்ரா விருது வழங்கி கௌரவித்து உள்ளது. மேஜர் சரவணனின் 25 ஆவது நினைவு தினம் இன்று அனுசரிக்கப்படுகிறது

மேஜர் சரவணனின் 25 ஆவது நினைவு தினத்தையொட்டி திருச்சி வெஸ்டிரி பள்ளி அருகே உள்ள அவரது நினைவு தூணுக்கு திமுக சார்பாக பெரம்பலூர் பாராளுமன்ற தொகுதி வேட்பாளர் அருண் நேரு தலைமையில் மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தப்பட்டது இதில் மாநகராட்சி மேயர் அன்பழகன், முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் அன்பில் பெரியசாமி உள்ளிட்ட கழக நிர்வாகிகள் கலந்து கொண்டு அஞ்சலி செலுத்தினர்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

தற்போதைய செய்திகள்