ஜம்மு காஷ்மீரில் வைஷ்ணவி தேவி ஆலய யாத்திரையின் போது பயங்கரவாதிகள் ஹிந்து யாத்திரிகர்கள் மீது நடத்திய தாக்குதலில் குழந்தைகள் உள்பட 10 பேர் அகால மரணம் அடைந்தனர் இந்த பயங்கரவாத செயலை கண்டித்து விசுவ ஹிந்து பரிஷத் அமைப்பு சார்பில் நாடு முழுவதும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்று வருகிறது.

அதன்படி திருச்சி ஸ்ரீரங்கம் தேவி தியேட்டர் அருகில் விசுவ இந்து பரிசத் அமைப்பின் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் இன்று நடைபெற்றது இந்த கண்டன ஆர்ப்பாட்டத்திற்கு கோட்ட செயலாளர் முருகேசன் தலைமை தாங்கினார். ஆர்பாட்டத்தில் பசு பாதுகாப்பு அமைப்பாளர் சசிகுமார் மாவட்ட செயலாளர் சீனிவாசன் மாவட்ட இணை செயலாளர் கோபு ஆகியோர் கண்டன உரையாற்றினர். இந்த ஆர்ப்பாட்டத்தில் மாவட்ட பொறுப்பாளர்கள் ஆனந்த பத்மநாபன் வீரப்பன் ஸ்ரீரங்கம் பொறுப்பாளர் விஜயகுமார் உள்ளிட்டோர் கலந்துகொண்டு கண்டன கோஷங்கள் எழுப்பினர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *