திருச்சி பொன்மலை ரயில் நிலையத்திற்கும் டவுன் ரயில் நிலையத்திற்கும் இடையே சுமார் 70 வயது மதிக்கத்தக்க முதியவர் ரயிலில் அடிபட்டு சம்பவ இடத்திலேயே இறந்துள்ளார். இறந்த முதியவர் அடையாளம் தெரியவில்லை. இது குறித்து திருச்சி இருப்புப் பாதை காவல் துறையினர் விசாரிக்கையில் இறந்தவர் குறித்த விபரம் யாருக்கும் தெரியவில்லை. இறந்த முதியவர் வெள்ளை நிற வேஷ்டி மட்டும் அணிந்திருந்தார்.

இறந்த நபர் நல்லடக்கத்திற்காக திருச்சி இருப்புப் பாதை காவல் நிலைய சிறப்பு உதவி ஆய்வாளர் பாலமுருகன் திருச்சி அமிர்தம் சமூக சேவை அறக்கட்டளை நிர்வாக அறங்காவலர் யோகா ஆசிரியர் விஜயகுமார்க்கு தகவல் அளித்தார். தகவலின் அடிப்படையில் திருச்சி இருப்புப் பாதை காவல் நிலைய சிறப்பு உதவி ஆய்வாளர் பாலமுருகன் முன்னிலையில் ரயிலில் அடிபட்டு இறந்த உரிமை கோரப்படாத ஆதரவற்ற அனாதைப் பிரேதத்திற்கு அமிர்தம் சமூக சேவை அறக்கட்டளை நிர்வாக அறங்காவலர் யோகா ஆசிரியர் விஜயகுமார் இறுதி சடங்கு செய்து நல்லடக்கம் செய்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *