திருச்சியில் இன்று நாடாளுமன்ற உறுப்பினர்கள், மாநிலங்களவை உறுப்பினர்கள் பங்கு பெற்ற ரயில்வே குறைபாடுகள், பணிகள் தொடர்பான கலந்தாய்வு கூட்டம் தென்னக ரயில்வே பொது மேலாளர் தலைமையில் நடைபெற்றது இந்தக் கூட்டத்தில் கலந்து கொண்ட பின்னர் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த திருச்சி நாடாளுமன்ற உறுப்பினர் துரை.வைகோ பேசுகையில்:-திருச்சியில் இருந்து எர்ணாகுளம், பெங்களூர், திருப்பதி விரைவு ரயில் வண்டிகள் இயக்க வேண்டும் ரயில்வே துறை அமைச்சர் கோரிக்கை வைத்தேன். 3 ரயில்களில் ஏதாவது ஒரு ரயில் தான் தற்போது வழங்க முடியும் எனவே,பொது மக்களிடம் ஆய்வு மேற்கொண்டதில் திருச்சி திருப்பதி ரயில் வேண்டுமென பொதுமக்கள் கோரிக்கை வைத்தனர். குறிப்பாக வேலூர் சிஎம்சி மருத்துவமனை, விஐடி கல்லூரிகளுக்கு அதிகமாக மக்கள் செல்கின்றனர். எனவே இந்தத் திட்டத்தை நிறைவேற்ற வேண்டும் என வலியுறுத்தி உள்ளேன். திருச்சி பெங்களூர் ஏற்கனவே வந்திருக்கிறது. ஆனால் அதன் கட்டணம் அதிகம் எனவே, சாதாரண மக்கள் பயன்படுத்தும் வகையில் ரயில் இயத்த வேண்டும் என்பதே வலியுறுத்துள்ளேன் திருச்சி ரயில் உயர்மட்டபாலம் மேல குமரேசபுரம், மேலகல்கண்டார்கோட்டை, ஸ்ரீரங்கம் ரயில்வே பகுதியில்உயர் மட்ட பாலம், இனாம்குளத்தூர். ரயில்வே உயர்மட்ட பாலம், உடையான்பட்டி பாலம் இது அனைத்தும் 15 ஆண்டாக வைக்கப்பட்டு வந்த கோரிக்கை தற்போது ஒப்புதல் தரப்பட்டுள்ளது. மஞ்சத்திடல், அரியமங்கலம் பகுதிகளில் மெமோ ரயில்வே செட் வரவுள்ளது எனவே அப்பகுதியில் ரயில்வே வாகன சுரங்கப்பாதை ஆகியவைகளுக்கு மெமோ செட் பணி வேலையுடன் சேர்த்து பணி மேற்கொல்லப்படும் என தெரிவித்துள்ளனர். திருவெரும்பூர் ரயில் நிலையத்தில் சோழன் எக்ஸ்பிரஸ் நின்று செல்வதற்கு ஒப்புதல் கொடுக்கப்படும் என தெரிவித்துள்ளனர். இதுபோல் மேலும் கூடுதல் எக்ஸ்பிரஸ் ரயில்கள் நிற்பதற்கு கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது. தஞ்சாவூரில் இருந்து புதுக்கோட்டை, கந்தர்வகோட்டை வழியாக மதுரைக்கு புதிய ரயில் பாதை எட்டு வருடம் முன்பாக பரிசீலிக்கப்பட்டது. தற்போது எந்த விபரமும் இல்லை என எனக் கூறப்பட்டு உள்ளது ஏன் அமைச்ச தெரிவித்தார். தற்போது புதிய ரயில் அதற்கான கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது.
முதியோர் மற்றும் ஊடக செய்தியாளருக்கு 50 சதவீதம் கட்டணம் சலுகை இருந்தது கொரோனா நிறுத்து அதில் எடுக்கப்பட்டுள்ளது. தற்போது மீண்டும் நடைமுறைப்படுத்த வேண்டும் என கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது. பொன்மலை ஜி கார்னர் பகுதியில் சர்வீஸ் ரோடு தொடர்பாக வைக்கப்பட்ட கோரிக்கை குறித்து ஒன்றிய நெடுஞ்சாலை அமைச்சரிடமும், மற்றும் ரயில்வே அதிகாரிகள் மாவட்ட நிர்வாகம் அது குறித்து பேசி விரைவில் அதை அமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. திருச்சியிலிருந்து புறப்படும் ரயில்கள் நீடிப்பதற்கு எந்த தடையும் கிடையாது. திருச்சியில் இருந்து நீடிக்கப்படும் ரயில்களில் கூடுதல் பெட்டிகள் இணைக்கப்பட வேண்டும். மெட்ரோ ரயில் தொடர்பாக தமிழக அரசு மதுரையில் கோயம்புத்தூர் கொடுக்கப்பட்டிருக்கிறது திருச்சிக்கான எந்த திட்டமும் இல்லை என்பது குறித்து அமைச்சரிடம் தெரிவித்துள்ளேன். மதுரை கோயம்புத்தூர் குரூப்பிற்கான எந்த ஒப்புதல் இதுவரை வழங்கப் படவில்லை. அப்படி நடக்கும் பட்சத்தில் திருச்சிக்கான மெட்ரோ ரயில் கொண்டு வரப்படும். மாரிஸ் தியேட்டர் அருகில் உள்ள ரயில்வே திட்டம் மாநில அரசு அதை விரைவுப்படுத்தி வருகிறது. ரயில்வே பொறுத்தவரை தேக்கம் ஏற்பட்டுள்ளது. ஜூன் மாதத்திற்குள் முடித்து தருவதாக கூறியிருந்தனர். இன்று நடைபெற்ற ரயில்வே கூட்டத்தில் கேட்ட போது மே மாதத்திற்குள் விரைவில் முடிந்து விடும் என தெரிவித்துள்ளனர். இதேபோல் அரிஸ்டோ பகுதியில் நடைபெற்றிருக்கும் ரயில்வே பாலமும் விரைவில் முடியும் என தெரிவித்தார். இந்த பேட்டின் போது மாவட்ட செயலாளர்கள் வெல்லமண்டி சோமு, மணவை தமிழ்மாணிக்கம் ஆகியோர் உடன் இருந்தனர்.