திருச்சி மாவட்டம் திருவரம்பூர் ஒன்றியத்திற்கு உட்பட்ட கீழக்குறிச்சி கிராமத்தில் 300 ஆண்டுகளுக்கு முன்பு பழமையான ராணி மங்கம்மாள் மண்டபத்தை போலி ஆவணங்களை தயார் செய்து இடித்துள்ளனர் வரலாற்று மிக்க ராணி மங்கம்மாள் மண்டபத்திற்கு போலி ஆவணங்களை தயார் செய்தவர்களையும் அதற்கு உடந்தையாக இருந்த அரசு அதிகாரிகள் மீதும் நடவடிக்கை எடுக்கக் கோரியும் , மீண்டும் இந்த இடத்தை மீட்டு பொதுமக்கள் பயன்பாட்டிற்கு வழங்க கோரி திருச்சி ரயில்வே சந்திப்பு எதிரே உள்ள காதிகிராப்ட் முன்பு பல்வேறு அமைப்புகளை சேர்ந்தவர்கள் மற்றும் பொதுமக்கள் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

இந்த கண்டன ஆர்ப்பாட்டத்திற்கு சாமானிய மக்கள் நல கட்சி மாவட்ட பொருளாளர் ஜோசப் தலைமை தாங்கினார் மாவட்ட செயலாளர் ஷைனி முன்னிலை வகித்தார் தமிழ் தேச மக்கள் முன்னணி நிர்வாகி வழக்கறிஞர் கென்னடி மற்றும் வழக்கறிஞர் கமருதீன் ஆகியோர் சிறப்புரையாற்றினர். இந்த கண்டன ஆர்ப்பாட்டத்தில் சத்குரு சமூக கல்வி வளர்ச்சி அறக்கட்டளை தமிழ் புலிகள் கட்சி நாம் திராவிட முன்னேற்ற கழகம் சாமானிய மக்கள் நலக் கட்சி கிறிஸ்தவ அருந்ததியினர் விழிப்புணர்வு இயக்கம் ரெட் பிளாக் கட்சி மக்கள் சமூக பாதுகாப்பு சங்கம் இயற்கை ஆர்வலர் சங்கம் உள்ளிட்ட பல்வேறு அமைப்புகள் சங்கங்கள் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டு கண்டன கோஷங்கள் எழுப்பினர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

தற்போதைய செய்திகள்