திருச்சி வயலூர் முருகன் கோவில் கும்பாபிஷேகத்தை முன்னிட்டு பாரதிய ஜனதா கட்சி சார்பாக பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.இந்த நிகழ்வுக்கு மாவட்ட தரவு மேலாண்மை பிரிவு செயலாளர் கண்ணன் தலைமையில் அன்னதானம் வழங்கபட்டது.
இந்த நிகழ்வுக்கு சிறப்பு அழைப்பாளராக பாஜக மூத்த நிர்வாகியும் மாவட்ட செயற்குழு உறுப்பினருமான இந்திரன் கலந்து கொண்டு பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கினார் மற்றும் இந்த நிகழ்வுக்கு முன்னால் திருவெறும்பூர் நகர் மண்டல் தலைவர் பாண்டியன், பழனியப்பன் ஆகியோர் கலந்து கொண்டனர்.