சேலத்தில் வருகிற டிசம்பர் 17ம் தேதி திராவிட முன்னேற்றக் கழகத்தின் மாநில இளைஞர் அணியின் இரண்டாவது மாநில மாநாடு நடைபெறுகிறது. அதனை முன்னிட்டு திருச்சி திமுக கிழக்கு மாநகர இளைஞரணி அமைப்பாளர் திராவிடப் பண்ணை முத்து தீபக் ஏற்பாட்டில் மாபெரும் சைக்கிள் பேரணி திருச்சி சிந்தாமணி அண்ணா சிலை அருகில் இருந்து திமுக திருச்சி தெற்கு மாவட்ட கழக செயலாளரும், தமிழக பள்ளிக் கல்வித்துறை அமைச்சருமான அன்பில் மகேஸ் பொய்யாமொழி தலைமையில்

மாநகர செயலாளர் திருச்சிராப்பள்ளி 3 மண்டல தலைவர் மதிவாணன் முன்னிலையில் நடைபெற்றது. இப்பேரணியானது மாநகரின் முக்கிய வீதிகளின் வழியாக காட்டூர் பெரியார் சிலையை சென்று அடைந்தது இந்நிகழ்வில் பகுதி கழகச் செயலாளர்கள் மோகன் நீலமேகம் தர்மராஜ் மணிவேல் பாபு ராஜ்முஹம்மது விஜயகுமார் சிவா மற்றும் இளைஞர் அணி நிர்வாகிகள் மாநகர கழக நிர்வாகிகள் அணிகளின் நிர்வாகிகள் பொதுமக்கள் பெரும் திரளாக கலந்து கொண்டனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *