அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் பொதுச்செயலாளரும் முன்னாள் முதலமைச்சரும் சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி பழனிச்சாமி அவர்களின் ஆணைக்கிணங்க வருகிற 20 ஆம் தேதி திருச்சி மாநகராட்சியை கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற உள்ளதுஅனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் பொதுச்செயலாளரும் முன்னாள் முதலமைச்சரும் சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி பழனிச்சாமி அவர்களின் ஆணைக்கிணங்க வருகிற 20 ஆம் தேதி திருச்சி மாநகராட்சியில் நிலவி வரும் சுகாதார சீர்கேடுகளைக் கண்டித்தும் கழக ஆட்சியில் கொண்டுவரப்பட்டு செயல்படுத்தப்பட்ட திட்டங்களை பராமரிக்காமல் அரசியல் காழ்ப்புணர்ச்சியோடு கிடப்பில் போட்டிருக்கும் மாநகராட்சி நிர்வாகம் மற்றும் திமுக அரசைக் கண்டித்தும், பாதாள சாக்கடைத் திட்டம் உள்ளிட்ட
பல்வேறு திட்டங்களை விரைந்து செயல்படுத்தவும், உயர்த்தப்பட்டுள்ள பல்வேறு வரிகளை உடனடியாகத் திரும்பப்பெற வலியுறுத்தியும், திருச்சி மாநகர் மாவட்டக் கழகத்தின் சார்பில் திருச்சி மாநகராட்சி கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற உள்ளது.

இந்தக் கண்டன ஆர்ப்பாட்டம் குறித்து திருச்சி மாநகர் மாவட்ட அதிமுக மாநில மாவட்ட நிர்வாகிகளுக்கான ஆலோசனைக் கூட்டம் திருச்சி மாநகர் மாவட்ட செயலாளரும், முன்னாள் துணை மேயருமான சீனிவாசன் தலைமையில் திருச்சி தில்லை நகர் ஏழாவது கிராஸ் பகுதியில் உள்ள அதிமுக மாவட்ட செயலாளர் அலுவலகத்தில் இன்று நடைபெற்றது.

இந்த ஆலோசனைக் கூட்டத்தில் மாவட்ட செயலாளர் சீனிவாசன் பேசுகையில்:- திருச்சி மாநகராட்சி 19வது வார்டு பகுதியில் கடந்த சில நாட்களாக சாக்கடை கலந்த கழிவு நீர் குடிநீருடன் கலந்து வருகிறது அதனை  குடித்து நூற்றுக்கும் மேற்பட்ட பொது மக்களுக்கு மஞ்சக்காமாலை காய்ச்சல் மற்றும் தொற்று நோய்கள் ஏற்பட்டு அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர் மேலும் பலர் இறந்ததாக தகவல் வெளியாகி வருகிறது. இதற்குக் காரணமான திமுக அரசையும் திருச்சி மாநகராட்சியை கண்டித்து வருகிற 20 ஆம் தேதி திருச்சி மரக்கடை பகுதியில் அதிமுக சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறுவது குறித்த ஆலோசனை கூட்டம் நடத்தப்பட்டது.

இந்த ஆலோசனை கூட்டத்தில் அதிமுக அமைப்பு செயலாளர் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ரத்தினவேல், மாவட்ட துணை செயலாளர் வனிதா, பகுதி செயலாளர்கள் அன்பழகன், ரோஜர், இளைஞர் அணி மாவட்ட இணை செயலாளர் சுரேஷ் குமார், ஐடி விங்ஸ் மாவட்ட செயலாளர் வெங்கட் பிரபு, திருச்சி மாநகர் மாவட்ட மாணவரணி துணைத் தலைவர் வழக்கறிஞர் சேது மாதவன் மற்றும் மாவட்ட நிர்வாகிகள் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

தற்போதைய செய்திகள்