இந்திய சுதந்திர போராட்ட வீரர், கப்பலோட்டிய தமிழன் வ.உ.சிதம்பரம் பிள்ளை குறித்து திமுக முன்னாள் மத்திய அமைச்சரும் நீலகிரி நாடாளுமன்ற திமுக உறுப்பினரும் ஆ.ராசா தவறான தகவலை பரப்புவதாக தமிழ்நாடு சோழிய வேளாளர் சங்கத்தினரின் பத்திரிக்கையாளர் சந்திப்பில் கண்டனம் தெரிவித்தனர்.

மேலும் இதுகுறித்து தமிழ்நாடு சோழிய வேளாளர் சங்கத்தின் மாநில தலைவர் டாக்டர் செந்தில் பிள்ளை நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:- சில நாட்களுக்கு முன் நாமக்கல்லில் நடந்த அரசியல் கூட்டத்தில் ஒட்டு மொத்த பிள்ளைமார் சமுதாயத்தையே இழிவு படுத்தும் வகையில் தி.மு.க. எம்.பி. அ.ராசா ஒருமையில் பேசியுள்ளார். மேலும் வ.உ.சி.யை நாங்கள் தெய்வமாக வணங்குகிறோம். இந்தநிலையில் சுதந்திர போராட்ட வீரரான வ.உ.சி. தனது மகனின் வேலைக்காக சிபாரிசு கடிதம் எழுதி பெரியாரிடம் கெஞ்சியதாக பரப்பியுள்ளனர். இது சுமார் 2½ கோடி பிள்ளைமார் சமுதாயத்தினர் மிகவும் மன அழுத்தத்தை ஏற்படுத்தி உள்ளது. எனவே அ.ராசாவின் செயலுக்கு கண்டனம் தெரிவிப்பதுடன், அவர் தனது செயலுக்கு வருத்தம் தெரிவிக்க வேண்டும்.

எதிர்காலத்தில் இதுபோல் எந்த ஒரு சமுதாயத்தையும் குறிப்பிட்டு இழிவு படுத்தும் வகையில் பேசுவதை தடுக்க தங்கள் கட்சியினரை கண்டிக்க வேண்டும் என்று தமிழக முதல்-அமைச்சருக்கு ஒரு கோரிக்கை விடுக்கிறோம். வருகிற 25-ந்தேதிக்குள் அவர் வருத்தம் தெரிவிக்கவில்லை என்றால் அடுத்த கட்ட நடவடிக்கையில் ஈடுபடுவோம். விரைவில் இந்த பிரச்சினைக்கு தீர்வு காணவில்லை என்றால் நாடாளுமன்ற தேர்தலில் அந்த கட்சியை ஆதரிக்க மாட்டோம். அதன் விளைவை தேர்தலில் சந்திப்பார்கள். அ.ராசாவை முதல்-அமைச்சர் கண்டிக்கவில்லை என்றால் தேர்தல் பிரசாரம் செய்ய அந்த கட்சியினர் வரும் போது கருப்பு கொடி காட்டுவோம். கடந்த முறை எங்களுக்கு எதிராக அ.தி.மு.க. கட்சி செயல்பட்டதால் ஆட்சியை இழந்தனர். இவ்வாறு அவர் கூறினார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

தற்போதைய செய்திகள்