திருச்சி மாவட்ட குற்றத்தடுப்பு பிரிவு(2) காவல்துறை துணை கண்காணிப்பாளராக முத்தரசன் என்பவர் பணியாற்றிவருகிறார். இவர் மீது வருமானத்துக்கு அதிகமாக சொத்துசேர்த்த வழக்கு நிலுவையில் உள்ளது.

இந்நிலையில் முத்தரசுக்கு தொடர்புடைய வீடுகளில், பெரம்பலூர் மாவட்ட லஞ்ச ஒழிப்பு காவல்துறை துணை கண்காணிப்பாளர் ஹேமசித்ரா தலைமையில் போலீசார் 10 போலீசார் சோதனை நடத்தினார்கள்.

திருச்சி செம்பட்டு பகுதி முத்தரசு வாழ்ந்து வரும் வாடகை வீட்டிலும், தஞ்சாவூரில் உள்ள அவரது தாயாரது வீட்டிலும் நடத்தப்பட்ட இச்சோதனையில், பணம், நகை மற்றும் சொந்து ஆவணங்களை போலீசார் கைப்பற்றி விசாரணை நடத்திவருகிறார்கள்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

தற்போதைய செய்திகள்