திருச்சி மாவட்டம் துறையூர் ஊராட்சி ஒன்றியத்துக்கு உட்பட்ட நரசிங்கபுரம் ஊராட்சியில் சட்ட விரோதமாக அனுமதி இன்றி செம்மண் அள்ளுவதாக துறையூர் வட்டாட்சியர் வனஜாவிற்கு ரகசிய தகவல் வந்தது தகவலின் அடிப்படையில் ரங்கநாதபுரத்தை சேர்ந்த வருவாய் ஆய்வாளர் பிரபாகரனை ஆய்வு செய்ய வட்டாட்சியர் கூறியுள்ளார் அதன் அடிப்படையில் இரவு பத்து மணி அளவில் நரசிங்கபுரம் பகுதியில் வருவாய் ஆய்வாளர் பிரபாகரன் ஆய்வு செய்தபோது அங்கு அனுமதி இன்றி ஒரு ஜேசிபி இயந்திரத்தின் உதவியுடன் டிராக்டர் ஒன்று மண் அள்ளுவதை பார்த்து உள்ளார்.

 இதனை தொடர்ந்து அவர் வண்டி எண்களை குறித்துக் கொண்டு வரும் பொழுது நரசிங்கபுரம் ஊராட்சி மன்ற தலைவர் மகேஸ்வரன் மற்றும் ஜேசிபி உரிமையாளர் மணி கிருஷ்ணன் மற்றும் ஜேசிபி ஓட்டுநர் தனபால் ஆகியோர் கண்மூடித்தனமாக வருவாய் ஆய்வாளர் பிரபாகர் மீது கொலை வெறி தாக்குதல் நடத்தியுள்ளனர் இதனால் படுகாயம் அடைந்த வருவாய் ஆய்வாளர் துறையூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப் பட்டுள்ளார் அவர் அளித்த புகாரின் மேல் துறையூர் காவல்துறையினர் வழக்கு பதிவு செய்துள்ளனர்.கடந்த மாதம் கிராம நிர்வாக அலுவலர் மணல் கொள்ளையர்கள் கொலை செய்த சம்பவத்தை தொடர்ந்து தங்களுக்கு பாதுகாப்பு வேண்டும் என்று கிராம நிர்வாக அலுவலர்கள் தமிழக அரசிடம் துப்பாக்கி கேட்டது குறிப்பிடத்தக்கது . அதனை தொடர்ந்து மீண்டும் வருவாய் துறையினர் மீது மணல் கொள்ளையர்கள் கொலை வெறி தாக்குதல் நடத்த ஆரம்பித்துள்ளனர் என்று சமூக ஆர்வலர்கள் கூறி வருகின்றனர். துறையூர் பகுதியில் மணல் கொள்ளையர்களை தடுக்க சென்ற வருவாய் ஆய்வாளர் மீது கொலை வெறி தாக்குதல் நடத்திய சம்பவம் இப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

இந்நிலையில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் வருவாய் ஆய்வாளர் பிரபாகரனை நேரில் சென்று பார்வையிட்டு ஆறுதல் கூறிம திருச்சி மாவட்ட கலெக்டர் பிரதீப் குமார். வருவாய் ஆய்வாளர் மீது கொலை வெறி தாக்குதல் நடத்திய ஊராட்சி மன்ற தலைவர் உள்ளிட்ட நான்கு பேர் மீது சட்ட நடவடிக்கை எடுக்க காவல் துறையினருக்கு உத்தரவிட்டார் அதனைத் தொடர்ந்து நான்கு பேர் மீதும் பல்வேறு வழக்குகள் பதிவு செய்யப்பட்டு 4-பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *