திருச்சி மாவட்டம் மண்ணச்சநல்லூர் அருகே துடையூர் பகுதியைச் சேர்ந்த விவசாயி ராஜாங்கம் (55), சிவநேசன் என்பவருக்கும் இடையே இடத்தகராறு இருந்து வந்துள்ளது. இந்நிலையில் கடந்த 29ஆம் தேதி சிவனேசன், பிரவிந்தராஜ், பிரபாகரன், ராஜ்குமார், ராம்குமார், பிரேம்குமார் உள்ளிட்டோர் தாக்குதல் நடத்தினர். இது தொடர்பாக ராஜாங்கம் அளித்த புகாரின் பேரில் வாத்தலை காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.

ஆனால் இவரது புகாரின் பேரில் எந்தவொரு நடவடிக்கையும் எடுக்கவில்லை என்று கூறி தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு சங்க தலைவர் அய்யா கண்ணு தலைமையில் காவல் நிலையத்தை முற்றுகையிட்டு சாலை மறியலில் ஈடுபட்டனர். உடனடியாக சாலை மறியலில் ஈடுபட்ட விவசாய சங்கத்தினரை போலீசார் அப்புறப்படுத்தி பேச்சுவார்த்தை நடத்தினர். மேலும் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என போலீசார் தெரிவித்ததன் பேரில் விவசாய சங்கத்தினர் கலைந்து சென்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

தற்போதைய செய்திகள்