விடுதலை சிறுத்தைகள் கட்சியின் சார்பில் ‘வெல்லும் சனநாயகம்’ மாநாடு இம்மாதம் 23ஆம் தேதி திருச்சி மாவட்டம் சிறுகனூரில் நடைபெற உள்ளது. கட்சியின் தலைவர் எழுச்சித்தமிழர் தொல்.திருமாவளவன் தலைமையில் நடைபெறும் இந்த மாநாட்டில் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், அகில இந்திய காங்கிரஸ் கட்சி தலைவர் மல்லிகார்ஜுன்கார்கே, கம்யூனிஸ்ட் கட்சி தலைவர்கள் சீதாராம் எச்சூரி, ராஜா உள்ளிட்ட பல்வேறு அகில இந்திய கட்சித் தலைவர்கள் மற்றும் மாநில கட்சி தலைவர்களும் பங்கேற்கின்றனர்.

மாநாடு தொடர்பான திருச்சி மாநகர மாவட்ட மேற்கு மாவட்ட செயற்குழு கூட்டம் மாவட்ட செயலாளர் புல்லட் லாரன்ஸ் தலைமையில் திருச்சி மத்திய பேருந்து அருகில் உள்ள தனியார் மண்டபத்தில் நடைபெற்றது.இது சிறப்பு அழைப்பாளராக கட்சியின் முதன்மைச் செயலாளர் பாவரசு, கலந்து கொண்டு மாநாடு பணிகள், செயல்படுத்தும் முறைகள், மாநாடு தொடர்பான செய்திகளை பொது மக்களிடம் கொண்டு செல்ல வேண்டிய வழிமுறைகள் குறித்து ஆலோசனை வழங்கினார்.

இந்நிகழ்வில் திருச்சி கரூர் மண்டல செயலாளர் தமிழாதன், மாநாடு மேலிட பொறுப்பாளர் கிட்டு, தொழிலாளர் விடுதலை முன்னணி மாநில துணைச் செயலாளர், திருச்சி மாநகராட்சி மாமன்ற உறுப்பினர் பிரபாகரன், பொறியாளர் அணியின் மாநிலச் செயலாளர் சந்திரசேகரன், இளஞ்சிறுத்து பாசறை மாநில நிர்வாகி அரசு,மற்றும் கட்சியினர் திரளாக கலந்து கொண்டனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

தற்போதைய செய்திகள்