விஜயதசமியை முன்னிட்டு “அ”என்னும் தமிழ் எழுத்தை விஜயதசமி அன்று எழுதக்கூடிய “வித்யாரம்பம்” நிகழ்வு மும்மூர்த்திகள் ஸ்தலமான திருச்சி உத்தமர் கோயிலில் இன்று நடைபெற்றது.

இதில் உத்தமர் கோவிலில் பக்தர்களுக்கு அருள்பாலித்து வரும் மும்மூர்த்திகளை வணங்கி பெற்றோர் மடியில் குழந்தைகள் அமர்ந்து வாழை இலையில் நெல்மனிகளை கொட்டி தமிழ் எழுத்துக்களில் முதல் எழுத்தான “அ” எழுத்தை எழுத கற்றுக் கொடுத்தனர்.

இதனை “வித்யாரம்பம்” எழுதுதல் என்பார்கள்.இந்த நிகழ்வில் திருச்சி மட்டுமல்லாமல் திருச்சியை சுற்றி உள்ள பல்வேறு பகுதியிலிருந்து ஆயிரக்கணக்கான பெற்றோர்கள் தங்களது குழந்தைகளுடன் வந்து “வித்யாரம்பம்” பயிற்று வித்து வருகின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

தற்போதைய செய்திகள்