தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்க ஒன்றிய, மாவட்ட நிர்வாகிகள் கூட்டம் மாவட்ட தலைவர் தமிழ் செல்வன் தலைமையிலும், மாநில நிர்வாகிகள் அய்யாக்கண்ணு, மேகராஜன், வழக்கறிஞர் முத்துசாமி ஆகியோர் முன்னிலையில் நடைபெற்றது. இதில் 50-க்கும் மேற்பட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டனர். அதனைத் தொடர்ந்து கீழ்கண்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது..

அதில் இரண்டு மடங்கு இலாபகரமான விலையை விவசாய விளை பொருட்களுக்கு பெறுவது. இந்தியாவில் உள்ள அனைத்து விவசாயிகள் வாங்கிய அனைத்து கடன்களையும் தள்ளுபடி செய்ய வேண்டியும், விவசாய உணவு பொருளை வெளிநாட்டில் இருந்து இறக்குமதி செய்யக் கூடாது என்றும், கோதாவரி -காவேரி இணைப்புக்கு மத்திய அரசு நிதி ஒதுக்க வேண்டும் என்றும், மேலும், மாதம் ரூ.500 கொடுக்கும் விவசாய உதவி தொகையை ரூ.5,000 மாக உயர்த்தி கொடுக்க வேண்டுமென்றும், மேற்கண்ட கோரிக்கைகளுக்கு மத்திய அரசு செவி சாய்க்கவில்லை என்றால் வருகின்ற தேர்தலில் இந்தியா பிரதமர் மோடி போட்டியிடும் தொகுதியில் போட்டியிடுவது என்றும். குளித்தலையிலிருந்து குமாரவேலு தலைமையில் சென்னைக்கு வருகின்ற 25.12.2023ம் தேதி கிளம்பும் நடை பயணத்தில் கலந்துக் கொள்ளுவது என்றும்.காவிரி -அய்யாறு இணைப்பு வேண்டியும்.

மேலும், மேற்கு தொடர்ச்சி மலையில் இருந்து பொன்னனியாறு டேமுக்கு கால்வாய் வெட்டி தேனி, மதுரை, திண்டுக்கல், கரூர், திருச்சி விவசாயிகளை காப்பாற்ற போராடுவது. காவிரி கொள்ளிடம் வழியாக வெள்ள நீர் கடலில் சென்று கலக்காமல் காவிரியிலும், கொள்ளிடம் ஆற்றிலும், 1 கி.மீ-க்கு ஒரு தடுப்பணை என்று 100 தடுப்பணைகளை கட்டி நிலத்தடி நீர் மட்டத்தையும் விவசாயிகளையும் காப்பாற்ற வேண்டுகிறோம். தனி விவசாயி பாதிக்கப்பட்டாலும் இன்சூரன்ஸ் வழங்க வேண்டுமென்றும். விவசாயிகள் போராட கூடாது போராடினால் குண்டர் சட்டத்திலும், விவசாய சங்கத் தலைவர்கள் மேல் 30க்கு மேல் கேஸ் போடுவதை கண்டித்து காவல்நிலையத்தில் போராட்டம் நடத்துவது என்று தீர்மானிக்கப்பட்டது என்று தெரிவித்தனர்.

பின்பு.. செய்தியார்களை சந்தித்த அய்யாகண்ணு பேசியது.. விவசாயிகளை பழிவாங்கும் எண்ணத்தில் திமுக அரசு செயல்படுவதாக குற்றம் சாட்டினார். விவசாயிகளுக்கு இழப்பீடாக ஒரு ஏக்கருக்கு 30 ஆயிரம் ரூபாய் கொடுக்க வேண்டும். ஆனால் விவசாயிகள் அனைவரும் அடிமை என நினைத்து எதைக் கொடுத்தாலும் வாங்கிக் கொள்வார்கள் என்ற போக்கில் மாநில அரசு செயல்பட்டு வருகிறது. குறிப்பிட்டு தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் மீது போடப்பட்ட வழக்குகளுக்கு காரணம் என்னவென்று மாவட்ட ஆட்சியரிடம் முறையிட உள்ளோம், உரிய பதில் கிடைக்காவிட்டால், காவல் நிலையத்தை முற்றுகையிட தயங்க மாட்டோம் என்று தெரிவித்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

தற்போதைய செய்திகள்