தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்க தலைவர் அய்யாக்கண்ணு தலைமையிலான விவசாயிகள் கர்நாடக முன்னாள் முதல்வர், பிஜேபி தலைவர் பசவராஜ் பொம்மை காவிரியில் கர்நாடக அரசு தமிழகத்திற்கு தண்ணீர் திறக்க கூடாது, மீறி திறந்தால் போராட்டம் நடத்துவோம் என்று கூறியிருப்பது தமிழக விவசாயிகளை வஞ்சிப்பது மட்டும் இல்லாமல்,

தண்ணீர் இல்லாமல் தமிழகத்தை பாலைவனமாக மாற்றவேண்டும் என்ற எண்ணத்தில் சொல்லியிருப்பது, காவிரியில் தண்ணீர் திறந்து விட உச்ச நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தும், இவ்வாறு சொல்லியிருப்பது உச்ச நீதிமன்றம் உத்தரவை அவமதிப்பதாகும் என்வே கர்நாடகா அரசை கண்டித்து இன்று காலை திருச்சி மாவட்டம் முக்கொம்பு காவிரி ஆற்றில் இறங்கி நடுப்பகுதியில் மணலில் கழுத்துவரை புதைந்து போராட்டம் நடத்திவருக்கின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

தற்போதைய செய்திகள்