1990ல் ஸ்ரீ ராம் ஜென்மபூமி விடுதலை மற்றும் கோவிலின் கட்டுமானத்திற்காக அயோத்தியில் கரசேவையில் பலியானவர்களை நினைவு கூறும் வகையில் விஷ்வ ஹிந்து பரிஷத் பஜ்ரங்தள் மற்றும் டாக்டர்ஸ் ரத்த வங்கி சார்பாக திருச்சி மாவட்டம் ஸ்ரீரங்கம் அம்மா பண்டவம் அருகே பஜ்ரங்கதள் மாவட்ட பொறுப்பாளர் விக்னேஸ்வரன், இணை பொறுப்பாளர் பிரகாஷ் ஆகியோர் தலைமையில் ரத்த தானம் வழங்கும் நிகழ்வு தொடங்கப்பட்டது.

இதில் மாநில அலுவலக செயலாளர் சிவராஜ், மாவட்ட செயலாளர் என்.ஆர்.ஸ்ரீனிவாசன் ,மாவட்ட துணை தலைவர் எஸ்.ராஜகோபால்,மாவட்ட இணை சேவா பிரமுக் பாலசுப்பிரமணியன் மற்றும் ஏராளமான நிர்வாகிகள் கலந்து கொண்டு ரத்த தானம் செய்தனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

தற்போதைய செய்திகள்