வ.உ. சிதம்பரனாரின் 152 – வது பிறந்த நாளை முன்னிட்டு திருச்சி தில்லை நகர் பகுதியில் உள்ள அதிமுக மாவட்ட கழக அலுவலகத்தில், அவரது திருவுருவ படத்திற்கு, புறநகர் வடக்கு மாவட்ட கழக அதிமுக சார்பில், திருச்சி புறநகர் வடக்கு மாவட்ட கழக செயலாளர், முன்னாள் அமைச்சர் பரஞ்சோதி தலைமையில், திருச்சி புறநகர் வடக்கு மாவட்ட கழக அதிமுகவினர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

இந்நிகழ்ச்சியில் முன்னாள் அமைச்சர் வளர்மதி, முன்னாள் எம்எல்ஏக்கள், திருச்சி சிறுபான்மை நலப்பிரிவு மாவட்ட செயலாளர் புல்லட் ஜான் உள்ளிட்ட அதிமுக நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *