திருச்சி ஶ்ரீரங்கம் மேற்கு வீரேஷ்வர் நகர் பகுதியில் இந்தியன் அபாகஸ் நிறுவனத்தின் அங்கமான ஶ்ரீரங்கம் அபாகஸ் அகாடமி இயங்கிவருகிறது இதில் 100 மேற்பட்ட மாணவர்கள் பயின்று வருகின்றனர். இந்நிலையில் நேற்று ஶ்ரீரங்கம் அபாகஸ் அகாடமி சார்பாக அபாகஸ் மையங்களுக்கு இடையேயான போட்டி நடைபெற்றது 1 முதல் 5 நிலை வரை நடைபெற்ற இந்த போட்டியில் 100-க்கு மேற்பட்ட மாணவர்கள் கலந்து கொண்டு தங்களது திறமைகளை வெளிப்படுத்தினார்

இதில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு சிறப்பு பரிசுகள் வழங்கப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினர் இந்தியன் அபாகஸ் நிறுவனத்தின் நிறுவனர் பஷீர் அகமது, rehabindiya charitable trust நிறுவனர் சக்திவேல் ஆகியோர் கலந்துகொண்டு வெற்றிபெற்ற மாணவ மாணவிகளுக்கு பரிசுகளும் பாராட்டு சான்றிதழ்களும் வழங்கினார். இந்த போட்டிக்கான ஏற்பாடுகளை ஶ்ரீரங்கம் அபாகஸ் அகாடமி நிறுவனர் சாந்தி சிறப்பாக செய்திருந்தார்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *