ஸ்ரீரங்கம் அம்மா மண்டபம் புது தெரு பகுதியில் அமைந்திருக்கும் அருள்மிகு ஸ்ரீமத் அகிலாண்ட கோடி பிரம்மாண்ட நாயகியாய் சகல புவன சஷ்டி திதி சம்காரா திரோபவ அனுக்கிரக மூர்த்தியாய் சகல பக்தகோடிகளுக்கும் அருள் பாலித்து கொண்டு இருக்கும்

ஸ்ரீ விநாயகர் ஸ்ரீ முருகன் ஸ்ரீ மகா மாரியம்மன் ஸ்ரீ கருப்பண்ண சுவாமி ஆகிய பரிவார தெய்வங்களுக்கு மகா கும்பாபிஷேக விழா இன்று காலை வெகு விமர்சையாக நடைபெற்றது. முன்னதாக காவிரி ஆற்றில் இருந்து புனித நீர் எடுத்து வரப்பட்டு சிறப்பு யாகங்கள் செய்யப்பட்டு ஸ்ரீ மகா மாரியம்மனுக்கு அபிஷேக ஆராதனை நடைபெற்று கோவில் கலசங்களுக்கு புனித நீர் ஊற்றப்பட்டது.

இந்த மகா கும்பாபிஷேக விழாவிற்கு ஸ்ரீரங்கம் அம்மா மண்டப பகுதியை சுற்றியுள்ள ஆயிரக்கணக்கான பக்த கோடிகள் கலந்து கொண்டு அம்மன் அருள் பெற்று சென்றனர். அதனைத் தொடர்ந்து பக்த கோடிகளுக்கு சிறப்பு அன்னதானம் வழங்கப்பட்டது. இந்த கும்பாபிஷேக விழாவிற்கான ஏற்பாடுகளை ஸ்ரீ மகா மாரியம்மன் கோவில் விழா குழுவினர் மற்றும் பொதுமக்கள் ஆகியோர் செய்திருந்தனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *