திருச்சி மாவட்டம் அந்தநல்லூர் ஒன்றியம் ஸ்ரீரங்கம் பகுதியில் உள்ள கிழக்கு ரங்கா அரசு உதவி பெறும் நடுநிலைப்பள்ளியில் மாணவர் சேர்க்கை பேரணி இன்று நடைபெற்றது இந்த பேரணிக்கு எஸ் இ எஸ் உறுப்பினர் குமார் தலைமை தாங்கினார் வட்டார கல்வி அலுவலர் மருதநாயகம் வட்டார கல்வி அலுவலர் ஸ்டாலின் ராஜசேகர் வட்டார வளமை மேற்பார்வையாளர் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

மாணவர் சேர்க்கை விழிப்புணர்வு பேரணியை மாமன்ற உறுப்பினர் செல்வமணி மற்றும் எஸ் இ எஸ் உறுப்பினர் செல்வராஜ் ஆகியோர் கொடி அசைத்து தொடங்கி வைத்தனர். இந்த பேரணியானது கிழக்கு ரங்கா வீதிகள் வழியாக சென்றது மேலும் தமிழக அரசால் அரசு பள்ளி மாணவர்களுக்கு வழங்கப்படும் பல்வேறு நலத்திட்டங்களை விளக்கிக் கூறினார். ஊர்வலத்தில் கலந்து கொண்ட மாணவர்கள்

அனைவரும் படிப்போம் அகிலத்தை வெல்வோம் கல்வி குழந்தைகளின் அடிப்படை உரிமை பள்ளி வயது குழந்தைகளை அரசு பள்ளியில் சேர்த்திடுவீர் புத்தக சுமையின்றி படிக்க அரசு பள்ளிக்கு அனுப்புங்கள் உள்ளிட்ட கோஷங்களை எழுப்பியவாறு பேரணியில் பங்கேற்றனர். இந்தப் பேரணியில் தலைமை ஆசிரியர் ஆசிரியர்கள் பள்ளி மேலாண்மை குழு உறுப்பினர்கள் பெற்றோர் ஆசிரியர் கழகம் ஊராட்சி பிரதிநிதிகள் பெற்றோர்கள் அங்கன்வாடி ஆசிரியர்கள் இல்லம் தேடி கல்வி ஆசிரியர் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *