பிரதமர் மோடி சென்னையில் இருந்து இன்று காலை தனி விமானம் மூலம் சர்வதேச திருச்சி விமான நிலையம் வந்து.. விமான நிலையத்தில் இருந்து ஹெலிகாப்டர் மூலம் புறப்பட்டு ஸ்ரீரங்கம் யாத்ரி நிவாஸ் அருகே அமைக்கப்பட்டுள்ள ஹெலிகாப்டர் தளத்தில் வந்து இறங்கி அங்கிருந்து கார் மூலம் ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலுக்கு சென்றார். அப்போது அங்கு பிரதமர் மோடிக்கு பூரண கும்ப மரியாதை அளிக்கப்பட்டது.

அதனைத் தொடர்ந்து ஸ்ரீரங்கம் கோவில் யானை ஆண்டாளுக்கு பழங்களை அளித்து ஆசீர் பெற்றார். அதன்பிறகு ரெங்கநாதரை தரிசித்த பிரதமர் மோடி, கோவிலில் அனைத்து சன்னதிகளுக்கும் சென்று வழிபாடு நடத்தினார். பின்னர் அங்குள்ள மண்டபத்தில் தமிழறிஞர்கள் கம்பராமாயணத்தை பாடியதை மோடி கேட்டார். அதனுடன் அங்கு நடைபெறும் கம்பராமாயண பாராயண நிகழ்ச்சியிலும் பங்கேற்றார். பின்னர் மதியம் ஸ்ரீரங்கத்தில் இருந்து கார் மூலம் புறப்பட்டு பஞ்சக்கரை சென்றார். அங்கிருந்து ஹெலிகாப்டர் மூலம் திருச்சி விமான நிலையம் சென்று,

பின்னர் தனி விமானம் மூலம் அவர் மதுரைக்கு புறப்பட்டு சென்றார். பிரதமர் மோடி திருச்சி வருகையையொட்டி ஏற்கனவே பிரதமர் பாதுகாப்பு அதிகாரிகள் முகாமிட்டு கண்காணிப்பு பணியினை மேற்கொண்டுள்ளனர். மேலும் 4 ஆயிரத்துக்கும் மேற்பட்ட தமிழக போலீசாரும் பாதுகாப்பு பணிகளில் ஈடுபடுத்தப்பட்டனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

தற்போதைய செய்திகள்