108 வைணவ திருத்தணங்களில் முதன்மையானதும் பூலோக வைகுண்டம் என அனைவராலும் போற்றப்படும் திருச்சி ஸ்ரீரங்கம் அருள்மிகு ரங்கநாத சுவாமி திருக்கோவிலில் வருடம் தோறும் பல்வேறு திருவிழாக்கள் நடைபெற்றாலும் சித்திரை தேர் திருவிழா மிகவும் பிரசித்தி பெற்ற விழாவாக பார்க்கப்படுகிறது.பூலோக வைகுண்டம் என்று அழைக்கப்படும் திருச்சி ஸ்ரீரங்கத்தில் தை மாதம் புனர்பூச திருத்தேர்,பங்குனி கோரதம் என வேறு தேரோட்ட வைபவங்கள் நடைபெற்றாலும் பட்டித்தொட்டிகளில் உள்ள ஆயிரக்கணக்கான மக்கள் கலந்து கொள்ளும் நிகழ்வாக சித்திரை தேரோட்ட விழா நடைபெறுகிறது.

இந்த ஆண்டு சித்திரை தேரோட்ட விழாவிற்கான கொடியேற்றம் ஏப்ரல் 10ம்தேதி நடைபெற்ற நிலையில் நாள்தோறும் பல்வேறு வாகனங்களில் எழுந்தருளிய நண்பருமாள் திருக்கோவிலை வளம் வந்தார் – முக்கிய நிகழ்ச்சியான தேரோட்டம் இன்று நடைபெறுகிறது. புதுக்கோட்டை சிவகங்கை இராமநாதபுரம் திண்டுக்கல் சேலம் பெரம்பலூர் அரியலூர் தஞ்சை போன்ற எண்ணற்ற மாவட்டங்களில் இருந்து ஆயிரக்கணக்கான பக்தர்கள் திருவரங்கனின் திருத்தேரை கான குவிந்து வருகின்றனர்.

ரங்க ராஜா – ரங்கபிரபு கோவிந்தா என்கிற கோஷம் முழங்க எழில் மிகு தேரில் பவனி வர உள்ளார் திருவரங்கண். சரியாக 6மணிக்கு மேல் திருதேர் வடம் பிடித்தல் நடைபெற உள்ளது – பக்தர்களின் பாதுகாப்பு கருதி திருச்சி மாவட்ட காவல்துறையின் சார்பில் சுமார் 700 க்கு அதிகமான காவல் துறை பாதுகாப்பு பணியில் உள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

தற்போதைய செய்திகள்