திருச்சி ஸ்ரீரங்கம் மங்கம்மா நகர் பகுதியில் சாய்மா கோகோ கிரீன் பேரடைஸ் அண்டு நிகிலா எக்ஸ்போர்ட் பிரைவேட் லிமிடெட் நிறுவனம் புதிதாக அமைக்கப்பட்டது. இது தேங்காய் நாரிலிருந்து தயாரிக்கப்பட்ட மதிப்பு கூட்டுப் பொருட்களின் விற்பனை நிலையம் ஆகும்.

இதன் திறப்பு விழா இன்று (வியாழக்கிழமை) காலை 10 மணிக்கு நடைபெற்றது. திருச்சி ஆசிரியரும், மகளிர் மேம்பாட்டு சமூகம் மற்றும் பண்பாட்டு அமைப்பின் மாநில பொது செயலாளரும் மேற்கண்ட சாய்மா நிறுவனத்தின் நிர்வாக இயக்குனருமான டாக்டர் ரெ. மதனா வரவேற்றார். விழாவில் தி.மு.க. முதன்மை செயலாளரும், தமிழக நகராட்சி நிர்வாக துறை அமைச்சருமான கே.என்.நேரு., தொழிலதிபர் கே.என். அருண்நேரு ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டு புதிய வணிக நிறுவனத்தின் அலுவலக கட்டிடத்தை திறந்து வைத்தார்.

இதில் மத்திய மாவட்ட தி.மு.க. செயலாளர் வைரமணி, வடக்கு மாவட்ட செயலாளர் காடுவெட்டி தியாகராஜன் எம்.எல்.ஏ., திருச்சி மாநகராட்சி மேயர் மு. அன்பழகன், ஸ்ரீரங்கம் எம்.எல்.ஏ. பழனியாண்டி, கோயர் போர்டு மண்டல விரிவாக்க மையத்தின் செயலாளர் எம். குமரராஜா ஆகியோர் சிறப்பு அழைப்பாளர்களாக கலந்து கொண்டனர். விழாவுக்கான ஏற்பாடுகளை ஆசிரியர் ரெ.மதனா செய்திருந்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *