திருச்சி ஸ்ரீரங்கம் ரங்கநாதசுவாமி திருக்கோவில் வைகுந்த ஏகாதசி விழா திருநெடுந்தாண்டகத்துடன் இன்று தொடங்குகிறது..இந்த திருவிழாவானது (13.12.2023) முதல் (22.12.2023) வரை பத்து திருவிழாவாகவும், (23.12.2023) ஆம் தேதி முதல் (02.01.2024) ஆம் தேதி வரை இராப்பத்து திருவிழாவாகவும் நடைபெறுகிறது. (23.12.2023) ஆம் தேதி அதிகாலை 4:00 மணிக்கு பரமபதவாசல் திறக்கப்படவுள்ளது. திருச்சி மாநகரின் மிக முக்கியமான திருவிழாவை முன்னிட்டு காவல்துறை சார்பில் பாதுகாப்பு பணிக்காக ஸ்ரீரங்கம் அரங்கநாதசுவாமி திருக்கோவில் ரெங்கவிலாஷ் மண்டபம் அருகில் மாநகர காவல்துறை சார்பில் புறக்காவல் நிலையம் அமைக்கப்பட்டுள்ளது. இதனை நேற்று திருச்சி மாநகர காவல் ஆணையர் காமினி திறந்து வைத்தார்.

 திறப்பு விழாவின் போது ஶ்ரீரங்கம் அரங்கநாதசுவாமி திருக்கோவில் இந்து அறநிலைய துறை இணை ஆணையர் செயல் ஆணையர் மாரியப்பன் அவர்கள் மற்றும் காவல் துறை துணை ஆணையர்கள் வடக்கு மற்றும் தெற்கு, ஸ்ரீரங்கம் சரக உதவி ஆணையர், காவல்துறை அதிகாரிகள் மற்றும் கோவில் ஊழியர்கள் முக்கிய நிர்வாகிகள் கலந்து கொண்டர்கள். திருச்சி மாநகர காவல் ஆணையர் அவர்கள் கூறுகையில்…. கடந்த வருடம் சுமார் 2 லட்சம் பக்தர்கள் தரிசனத்திற்கு வருகை புரிந்தார்கள், மேலும் இந்த வருடம் சுமார் 2.5 லட்சம் பக்தர்கள் தரிசனத்திற்கு வருகை புரிவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் வைகுந்த ஏகாதசி விழாவிற்கு போதுமான பாதுகாப்பு அளிப்பதற்காக உள்ளுர் மற்றும் வெளியூர் காவல்துறை அதிகாரிகள் மற்றும் காவலர்கள் சுமார் 2500 பேர் பாதுகாப்பு பணிக்கு பணியமர்த்தப்பட உள்ளார்கள். மேலும் பகல் பத்து மற்றும் இராப்பத்தின் போது திருச்சி மாநகர காவல்துறையினர் மட்டும் 380 பேர் 2 சுழற்சி முறையில் பாதுகாப்பு பணியில் அமர்த்தப்பட்டு பக்தர்கள் சிரமமின்றி வசதியாக சாமி தரிசனம் செய்ய ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

போக்குவரத்து நெரிசலின்றி பக்தர்கள் கோவிலுக்கு வந்து செல்ல போக்குவரத்து காவலர்கள் அதிக அளவில் பணி நியமிக்கப்பட்டு, போக்குவரத்தை சீராக செல்ல ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகிறது. மேலும் இந்த வருடம் கோவிலுக்கு வரும் பக்தர்கள் நான்கு சக்கர வாகனங்களை சித்திரை வீதி மற்றும் உத்திர வீதியில் நிறுத்த அனுமதியில்லை. கோயிலுக்கு வரும் பக்தர்கள் வாகனங்கள் நிறுத்துவதற்கு ஒதுக்கப்பட்டுள்ள இடங்களில் வாகனங்களை நிறுத்த அறிவுறுத்தப்படுகிறது. தற்சமயம் பொதுமக்கள் பாதுகாப்பிற்காக கோவிலின் உட்புறத்தில் முக்கிய இடங்களில் 120 CCTV கேமராக்களும், கோவிலை சுற்றி வெளிபுறத்தில் 102 CCTV கேமராக்களும், வாகனங்கள் நிறுத்துமிடத்தில் 14 CCTV கேமராக்கள் என மொத்தம் 236 கேமராக்கள் பொருத்தப்பட்டு அதை புறக்காவல் நிலையத்திலிருந்தே கண்காணிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. மேலும் ஒலிபெருக்கி அமைக்கப்ட்டு பொதுமக்களுக்கு அவ்வப்போது அறிவிப்பு செய்து தகவல் தெரிவிக்க முன்னேற்ப்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.

மேலும் கோயிலின் உட்புறத்தில் பொருத்தப்பட்டுள்ள 120 CCTV கேமராக்களிலும் 70,000 குற்றாவாளிகளின் புகைப்படங்களை FRS (Face Recognizing Software) முகம் அடையாளம் காணும் மென்பொருள் மூலம் இணைக்கப்பட்டுள்ளது. யாரேனும் குற்றவாளிகள் அங்கு நடமாடினால் மேற்கண்ட கேமராவானது குற்றவாளிகளின் முகங்களை ஸ்கேன் செய்து மென்பொருளில் பொருத்தப்பட்டுள்ள குற்றவாளிகளின் புகைப்படங்களுடன் ஒப்பீடு செய்து காவல் துறைக்கு எச்சரிக்கை ஒலியை ஏற்படுத்தும். மேலும் வரும் 13.12.2023-ந் தேதிலிருந்து 24 மணிநேரமும் கண்காணிக்க சுழற்சி முறையில் காவலர்கள் பணியமர்த்தப்பட்டு தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுப்படுத்தப்பட்டுள்ளதாக திருச்சி மாநகர காவல் ஆணையர் தெரிவித்தார்கள்.ஆகஸ்ட் 5ம் தேதி ஸ்ரீரங்கம் வெள்ளை கோபுரம் எதிரே உள்ள கிழக்குவாசல் நுழைவு வாயில் கோபுரத்தின் ஒருபகுதி இடிந்து விழுந்தது. இதனால் அந்த நுழைவாயில் போக்குவரத்து தடை செய்யப்பட்டு பராமரிப்பு பணிகள் நடைபெற்று வருகிறது வைகுந்த ஏகாதசி திருவிழாவை ஒட்டி அந்த கிழக்கு கோபுரத்தின் வழியாக பொதுமக்கள் அனுமதிக்கப் படுவார்களா என மாநகர காவல் ஆணையரிடம் கேள்வி எழுப்பிய போது. …. பாதுகாப்பு காரணம் கருதி அந்த வழியாக நடந்து செல்ல கூட அனுமதி மறுத்துள்ளதாக அவர் தெரிவித்தார்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *