ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலில் இன்று சக்கரத்தாழ்வார் சன்னதியிலும், நாளை பெருமாள் சன்னதியிலும் சகஸ்ரதீப கூட்டு வழிபாடு நடைபெற உள்ளது. குறிப்பாக உலக நன்மைக்காக, ஆண்டுதோறும் ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலில் கார்த்திகை மாதத்தில் சகஸ்ரதீப கூட்டு வழிபாடு 3 நாட்கள் நடைபெறும். இந்தாண்டிற்கான கார்த்திகை மாத சகஸ்ரதீப கூட்டு வழிபாடு தாயார் சன்னதியில் நடைபெற்றது.

ஸ்ரீரங்க நாச்சியார் தாயார் சன்னதியில் இன்று வெள்ளிக்கிழமை மாலை சகஸ்ரதீபம் ஏற்றப்பட்டது இதில் கோயில் சுற்றுப்பிரகாரத்தில் ஸ்ரீ சக்கரம் சங்கு சக்கரம் ஆகிய வடிவில் தீப விளக்குகள் ஏற்றப்பட்டது மேலும் தாயார் சன்னதி சுற்றுப்பிரகாரத்திலும் தீப விளக்குகள் ஏற்றப்பட்டது, நாளை சக்கரத்தாழ்வார் சன்னதியிலும், நாளை மறுநாள் பெருமாள் சன்னதியிலும் சகஸ்ரதீப கூட்டு வழிபாடு நடைபெற உள்ளது. இந்த சகஸ்ரதீப கூட்டு வழிபாட்டில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு தீபம் ஏற்றிவழிபட்டனர்.
