திருச்சி மிளகு பாறையில் உள்ள ஸ்ரீபுத்தடி மாரியம்மன் கோவில் விழா நடைபெற்று வருகிறது. இதன் ஒரு பகுதியாக இன்று காலை திருச்சி காவேரி ஆற்றின் படித்துரையில் இருந்து. சுமார் 1000 க்கும் மேற்ப்பட்ட பக்தர்கள் மஞ்சள் ஆடை அணிந்து பால்குடம், அக்னிசட்டி, அலகுகுத்தி, காவடி எடுத்து ஊர்வலமாக எடுத்து வந்து மிளகு பாறையில் அமைந்துள்ள ஸ்ரீ புத்தடி மாரியம்மனுக்கு பக்தர்கள் தங்கள் நேர்த்தி கடனை செலுத்தினர்.

 ஊர்வலத்தில் கலந்து கொண்ட பக்தர்களுக்கு திருச்சி மாவட்ட விடுதலை சிறுத்தை கட்சியின் சார்பில் 2வது வருடமாக மாநகர மாவட்ட துணைச் செயலாளர் புல்லட்லாரன்ஸ் தலைமையில் வெயிலில் நடைபய யாக வந்த 700க்கு மேற்பட்ட பக்தர்களுக்கு ரோஸ்மில்க், நீர்மோர், பாதாம்பால், ஃப்ரூட் மிக்ஸ் ஆகியவை வழங்கப்பட்டது. இந்நிகழ்வில் மாநில நிர்வாகி அரசு மற்றும் அலெக்ஸ், ஜெயக்குமார், மோகன், தங்கவேல், ரத்தினம், பிரதீப், மணி பிரோஸ், உட்பட பலர் கலந்து கொண்டனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

தற்போதைய செய்திகள்