பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த கோரியும், ஓய்வூதியம் இல்லாத பணியாளர்களுக்கு ஓய்வு ஊதியம் வழங்கிட கோரியும், தொகுப்பூதியம், மதிப்பூதியம், சிறப்பு காலமுறை ஊதியம் பெறும் பணியாளர்களுக்கு நிரந்தர காலமுறை ஊதியம் வழங்க வேண்டும்,

அரசுத் துறையில் பணிபுரிபவர்களுக்கு குறைந்தபட்ச ஊதியம் 18,000 -மும், குறைந்தபட்ச ஓய்வூதியம் 10 ஆயிரம் வழங்க வேண்டும் என்பது உள்ளிட்ட 10 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு அரசு பணியாளர் சங்கத்தினர் இன்று காலை திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

முன்னதாக இந்த ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்ட தலைவர் முருகானந்தம் தலைமை தாங்கினார். ஆர்ப்பாட்டத்தில் மாநில துணைத் தலைவர் சோனி கருப்பையா சிறப்புரையாற்றினர் மாவட்ட செயலாளர் ரமேஷ் முன்னிலை வகித்தார். கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பப்பட்டது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

தற்போதைய செய்திகள்