திருச்சி மாவட்டம் தொட்டியம் அருகே உள்ள கிராமத்தை சேர்ந்த மாணவன் குமார் வயது 15 (பெயர் மாற்றப்பட்டுள்ளது) அப்பகுதியில் உள்ள அரசு மேல்நிலைப்பள்ளியில் படித்து வருகிறான். தற்போது பத்தாம் வகுப்பு தேர்வு எழுதிய மாணவன் கணிதம் மற்றும் அறிவியல் பாடத்தில் தோல்வியடைந்ததால் எங்கே பெற்றோர்கள் தன்னை திட்டுவார்கள் என நினைத்து வீட்டில் இருந்து மாயமானான். இதுபற்றி தகவல் அறிந்த மாணவனின் தந்தை பல்வேறு இடங்களில் தேடிப்பார்த்தும் எங்கும் கிடைக்காததால் காவல்நிலையத்தில் இதுகுறித்து புகார் கொடுத்தார் புகாரின்பேரில் வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் மாயமான மாணவனை தேடி வந்தனர். இந்நிலையில் வேலூரில் உள்ள ஒரு தனியார் நிறுவனத்தில் மாணவன் வேலைக்கு சேர்ந்து உள்ளது தெரிய வந்தது உடனே காவலர் பிரதீப் மற்றும் மாணவனின் சகோதரர் மாயமான மாணவனை காவல் நிலையத்துக்கு அழைத்து வந்து அவரது பெற்றோரிடம் ஒப்படைத்தனர். கண்டுபிடித்த காவல் நிலைய காவலர் பிரதீப்பை பொதுமக்கள் பாராட்டி வாழ்த்து தெரிவித்தனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

தற்போதைய செய்திகள்