திருச்சி மாவட்டத்தில் குற்றசம்பவங்களை குறைக்க வேண்டியும், சாலை விபத்துக்களை தடுக்க வேண்டியும் அனைத்து காவல்நிலைய அதிகாரிகள் மற்றும் காவலர்களுக்கு உத்தரவிட்ட மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சுஜித்குமார் திடீர் சர்ப்ரைஸ் விசிட்டாக நேற்று இரவு திருச்சி ராம்ஜிநகர், இனாம்குளத்தூர், மணப்பாறை உள்ளிட்ட காவல் நிலையங்களுக்கு சைக்கிளில் சென்று இரவு பணி மேற்கொள்ளும் காவலர்களுடன் கலந்துரையாடி ஆய்வு மேற்கொண்டார்.

 மேலும் நேற்று இரவு 10.30 மணிமுதல் அதிகாலை 4.30 மணி வரை திருச்சி மாவட்டத்தில் சுமார் 100 கிலோ மீட்டர் தூரம் சைக்கிள் பயணம் மேற்கொண்டு இரவு பணி காவலர்களுக்கு பல்வேறு இடங்களில் அறிவுரை வழங்கினார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

தற்போதைய செய்திகள்