திருச்சி மாநகர் பகுதியில் பாலக்கரை அருகே பிரபாத் ரவுண்டானாவில் நடிகர் திலகம் சிவாஜி கணேசனுக்கு திருச்சியில் சிலை அமைக்க முடிவு செய்யப்பட்டு அதற்கான ஏற்பாடுகள் கடந்த திமுக ஆட்சியில் செய்யப்பட்டது. 2011 ஆம் ஆண்டு திருச்சி பாலக்கரை பிரபாத் ரவுண்டானாவில் சிவாஜிக்கு 9 அடி உயர வெண்கல சிலை அமைக்கப்பட்டது.

சிலை திறப்பதற்கு முன் ஆட்சி மாற்றம் ஏற்பட்டதால் சிலை துணியைக் கொண்டு மூடப்பட்டது. தற்போது வரை மூடிய சிலை மூடியவாறு இருக்கிறது. இதனை திறக்க வேண்டி சிவாஜி ரசிகர்கள் சார்பாக பல்வேறு கோரிக்கைகள் அரசுக்கு வைக்கப்பட்டு வருகிறது.

இந்நிலையில் திருச்சி மாவட்ட சிவாஜி ரசிகர்கள் நற்பணி சங்கம் , சிவாஜி பிலிம் கிளப் அமைப்பின் தலைவர் அண்ணாதுரை தலைமையில் தமிழக முதல்வருக்கு திருச்சி பாலக்கரை சிவாஜி கணேசன் சிலையை திறக்க வேண்டி பதிவு தபால் அனுப்பி வைத்தனர் இதில் சிவாஜி கணேசன் ரசிகர்கள் கலந்துகொண்டு திருச்சி தலைமை தபால் நிலையத்தில் முதல்வருக்கு பதிவு தபால்களை அனுப்பி வைத்தனர்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

தற்போதைய செய்திகள்