திருச்சி மணிகண்டம் ஒன்றியம் திருமலை சமுத்திரம் கிராமத்தைச் சேர்ந்த ஊர் பொதுமக்கள் பட்டையத்தார் பிச்சை மூக்கன், கணேசன், சிவக்குமார், கதிர்வேல், சுப்பிரமணி, கௌதமன் முன்னிலையில் கலெக்டர் பிரதீப் குமாரை சந்தித்து இன்று ஒரு புகார் மனு அளித்தனர்.அதில் அவர்கள் கூறியிருப்பதாவது ;-

திருமலை சமுத்திரம் கிராமத்தில் புல எண் 95 ல்14 ஏக்கர் நீர் நிலை புறம்போக்கு உள்ளது. இந்த நிலத்தின் மதிப்பு இன்றைய சந்தை மதிப்பில் ரூ. 15 கோடி அளவுக்கு இருக்கும். இதனை வெளியூரை சேர்ந்த சில நபர்கள் மனைகளாக பிரித்து முள்வேலி அமைத்து ஏக்கர் கணக்கிலும் வீட்டுமனை அளவிலும் போலி ஆவணங்கள் மூலம் நில மோசடி செய்து விற்பனை செய்து வருகின்றனர்.

இந்த இடம் மானாவாரி புறம்போக்கு ஆகும். எனவே நீர்நிலை புறம்போக்கில் உள்ள ஆக்கிரமிப்பை அகற்றி தருமாறு கேட்டுக்கொள்கிறோம். இவ்வாறு அந்த மனுவில் கூறியுள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *