திருச்சி ஸ்ரீரங்கம் யாத்ரி நிவாஸ் அருகில் உள்ள திருவெறும்பூர் கூட்டுக் குடிநீர் திட்ட தலைமை நீரேற்று நிலையத்திலிருந்து, நீரேற்றும் குழாய்கள் கொண்டு செல்லும் பாலம், கொள்ளிடம் ஆற்றில் ஏற்பட்டுள்ள வெள்ளப்பெருக்கு காரணமாக பழுதடைந்துள்ளது. இந்நிலையில் பழுதடைந்துள்ள பாலத்தை நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் கே என் நேரு இன்று நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

தொடர்ந்து தேவையான நடவடிக்கைகளை துரிதமாக மேற்கொள்ள அலுவலர்களுக்கு உத்தரவிட்டார். இந்நிகழ்வில் மாவட்ட ஆட்சித் தலைவர் பிரதீப் குமார், மாநகராட்சி ஆணையர் வைத்திநாதன், மாநகராட்சி முதன்மை பொறியாளர் சிவபாதம் உட்பட அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *