தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்க மாநில தலைவர் அய்யாக்கண்ணு தலைமையில் திருச்சி சிந்தாமணி பகுதியில் பல்வேறு கோரிக்கைகள் வலியுறுத்தி 15வது நாளாக தலையில் பச்சை வண்ண முக்காடு அணிந்து அரை நிர்வாண போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

இப் போராட்டத்தில் மத்திய, மாநில அரசுகள் விவசாய விலை பொருட்களுக்கு இரண்டு மடங்கு லாபகரமான விலையை கொடுக்காமல்.விவசாயிகளை வஞ்சித்து வருகிறது. ஒரு கிலோ நெல்லுக்கு 54ரூபாயும் ஒரு டன் கரும்புக்கு 8,100 ரூபாய் வழங்க வேண்டும். விவசாயிகள் வாங்கிய கடனை தள்ளுபடி செய்ய வேண்டும் என விவசாயிகள் தொடர் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

அந்த வகையில் இன்று 15வது நாளாக இன்று காதில் பூ வைத்து அரை நிர்வாண காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். முன்னதாக நகராட்சி நிர்வாக துறை அமைச்சர் கே என் நேரு விவசாயிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தினார். கோரிக்கைகள் குறித்து உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதி அளித்தார் இருப்பினும் தொடர்ந்து விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

தற்போதைய செய்திகள்