Month: October 2021

திருச்சி பாலக்கரை காவல் நிலையத்தில் பணிபுரிந்த SSI திடீர் சாவு.

திருச்சி லால்குடி கோவண்டா குறிச்சி பகுதியை சேர்ந்தவர் சிறப்பு உதவி ஆய்வாளர் கணேசன் வயது 58 மனைவி, மகன், மகள் ஆகியோருடன் வசித்து வந்தார். திருச்சி மாநகரில் உள்ள கண்டோன்மென்ட், எடமலைப்பட்டிபுதூர், உறையூர், கோட்டை உள்ளிட்ட காவல் நிலையங்களில் சிறப்பாக பணியாற்றி…

தமிழகத்தில் 62%, திருச்சியில் 63% பேருக்கு முதல் டோஸ் – அமைச்சர் மா.சுப்ரமணியன் தகவல்.

இன்று நடந்த நான்காவது மெகா தடுப்பூசி முகாம் 24,882 இடங்களில் நடத்தப்பட்டது. அதில் இன்று 17,19,544 பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டது. இதுவரை தமிழ்நாட்டில் 62 சதவீதம் பேருக்கும் திருச்சி மாவட்டத்தில் 63 சதவீதம் பேருக்கு முதல் டோஸ் தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. கொரொனா…

தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு தலைமையில் வருகிற அக்-10ம் தேதி திருச்சி மாவட்ட நகை அடகு பிடிப்போர் கூட்டமைப்பு உதயம்.

தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்புடன் இணைக்கப்பட்ட திருச்சி மாவட்ட நகை அடகு பிடிப்போர் கூட்டமைப்பின் நிர்வாகிகளின் செயற்குழு கூட்டம் திருச்சி பழைய பால்பண்ணை புதிய வெங்காய மண்டி கூட்ட அரங்கத்தில் இன்று நடந்தது. இந்த கூட்டத்திற்கு மாவட்ட செயலாளர் அன்பழகன் வரவேற்புரையாற்றிட,…

தமிழ்நாடு Dr.அம்பேத்கர் முதுகலை பட்டதாரி ஆசிரியர் முன்னேற்ற சங்கத்தின் கூட்டு நடவடிக்கை குழு ஆலோசனைக் கூட்டம் திருச்சியில் இன்று நடந்தது.

தமிழ்நாடு அரசு உயர்நிலை,மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர் கூட்டமைப்பு மற்றும் தமிழ்நாடு டாக்டர் அம்பேத்கர் முதுகலை பட்டதாரி ஆசிரியர் முன்னேற்ற சங்கத்தின் கூட்டு நடவடிக்கை குழு ஆலோசனைக் கூட்டம் திருச்சியில் இன்று நடந்தது. இந்த கூட்டத்தில் மாநில செய்தி தொடர்பாளர் பாஸ்கர்…

சிலம்ப உலக சம்மேளனத்தின் சார்பில் திருச்சியில் சிலம்ப போட்டி தேர்வு மாணவ-மாணவிகள் பங்கேற்பு.

  சிலம்ப உலக சம்மேளனத்தின் சார்பாக மாணவ-மாணவிகளுக்கு தகுதி பட்டை வழங்கும் விழா திருச்சி நேஷனல் கல்லூரி உள்விளையாட்டு அரங்கில் இன்று நடைபெற்றது. சிலம்ப உலக சம்மேளனத்தின் பொதுச் செயலாளர் சங்கர் தலைமையில் நடைபெற்றது. இந்த விழாவில் திருச்சி புதுக்கோட்டை கரூர்…

உலக வன உயிரின வார விழா – விழிப்புணர்வு சைக்கிள் பேரணி

உலக வன உயிரின வார விழாவையொட்டி திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் இருந்து வன உயிரினங்களை பாதுகாக்கும் விழிப்புணர்வு சைக்கிள் பேரணி இன்று நடந்தது. இந்த பேரணியை மாவட்ட ஆட்சித்தலைவர் சிவராசு கொடியசைத்து துவக்கி வைத்தார். காட்டிலில் வாழும் வன…

கொரோனா தடுப்பூசி செலுத்தியவர்களை ஊக்குவிக்கும் விதமாக சிறப்பு பரிசு வழங்கிய கோ-அபிஷேகபுரம் மாநகராட்சி.

தமிழகம் முழுவதும் 18 வயதிற்கு மேற்பட்ட பொதுமக்கள் கொரோனா தடுப்பூசி செலுத்திக் கொள்ள தமிழக அரசு பல்வேறு சிறப்பு முகாம்களைநடத்தி வருகிறது அதன் ஒரு பகுதியாக திருச்சி மாநகராட்சி கோ அபிஷேகபுரம் கோட்டத்திற்கு உட்பட்ட பகுதியில் 18வயதிற்கு மேற்பட்டவர்கள் ஒரு லட்சத்து…

நவ 1-ம் தேதி 20 மாணவர்களுடன் சுழற்சி முறையில் வகுப்புகள் – அமைச்சர் மகேஷ் தகவல்.

திருச்சி ரயில்வே ஜங்ஷன் எதிரில் உள்ள காதி கிராப்ட் விற்பனையகத்தில் தீபாவளிக்கான சிறப்பு விற்பனையை பள்ளி கல்வித்துறை அமைச்சர் மகேஷ் பொய்யாமொழி இன்று துவக்கி வைத்தார். அதனைத் தொடர்ந்து செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி கூறுகையில். தமிழகத்தில் ஏற்கனவே…

திருச்சி மாநகராட்சி சார்பில் யோகா, சைக்கிள் விழிப்புணர்வு பேரணி – கலெக்டர் சிவராசு தொடங்கி வைத்தார்.

திருச்சிராப்பள்ளி சீர்மிகு நகரத்திட்டம் – 75 ம் ஆண்டு சுதந்திரந்திருநாள் அமுதப்பெரு விழா திருச்சிராப்பள்ளி மாநகராட்சியில் சீர்மிகு நகரத்திட்டத்தின் கீழ் , இந்தியா சுதந்திரம் பெற்று 75 ஆண்டுகள் ஆவதை கொண்டாடும் விதமாக , Freedom 2 Walk and Cycle…

75-வது ஆண்டு இந்திய சுதந்திர தின ஓட்டம் – அமைச்சர் மகேஷ் துவக்கி வைத்தார்.

நாட்டின் 75 வது ஆண்டு சுதந்திர தினத்தை சிறப்பிக்கும் வகையில் மத்திய இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு அமைச்சகம் நாடு முழுவதும் உள்ள 744 மாவட்டங்களில் அந்தந்த மாவட்ட நேரு யுவ கேந்திரா, நாட்டு நலப்பணித் திட்டம், மாநில விளையாட்டு ஆணையத்தின்…

ஹர்ஷமித்ரா மருத்துவமனை சார்பில் மார்பக புற்றுநோய் விழிப்புணர்வு வாகனம் எம்எல்ஏ இனிகோ இருதயராஜ் துவங்கி வைத்தார்

ஆண்டுதோறும் அக்டோபர் மாதம் உலக சுகாதார மையத்தின் மார்பகப் புற்றுநோய் விழிப்புணர்வு மாதமாக அறிவிக்கப்பட்டு உள்ளது.‌ இதனையொட்டி ஆண்டுதோறும் ஹர்ஷமித்ரா புற்றுநோய் உயர் சிறப்பு மருத்துவமனை சார்பாக திருச்சி மாவட்டத்தில் பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகளை நடத்தி வருகிறது. இதன் தொடர்ச்சியாக இந்த…

உண்ணாவிரதத்துக்கு தடை – வீட்டுகாவலில் விவசாயிகள் சங்க தலைவர் அய்யாக்கண்ணு.

மத்திய அரசு கொண்டுவந்துள்ள விவசாயிகள் விரோத மூன்று வேளாண் சட்டங்களை வாபஸ் பெற கோரி அக்டோபர் 2ந்தேதி காந்தி ஜெயந்தி அன்று (நாளை) கன்னியாகுமரியில் உள்ள காந்தி நினைவு மண்டபத்தில் உண்ணாவிரதம் இருக்க முடிவு எடுக்கப்பட்டு தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு…

குப்பைக் கழிவுகளில் இருந்து மறுசுழற்சி மூலம் கைவினைப் பொருட்கள் கண்காட்சி.

திருச்சி மாநகராட்சி சாா்பில் 75ஆவது சுதந்திர திருநாளையொட்டி மாநகராட்சியின் மைய அலுவலகத்தில் வீட்டிலிருந்து உற்பத்தியாகும் குப்பைக் கழிவுகளிலிருந்து சுற்றுச்சூழல் பாதிக்காத வகையில் மறுசுழற்சி செய்து பயன்படுத்தும் கைவினைப் பொருள்கள் கண்காட்சி இன்று காலை 9 மணிக்கு தொடங்கி மாலை 5 மணி…

காந்தி, காமராஜர் படங்களுக்கு முன் கோரிக்கை மனு – பூட்டு சங்கிலியுடன் நூதன போராட்டம்.

திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இன்று காலை திருவரம்பூர் பகுதியை சுற்றியுள்ள பகுதி மக்கள் இலவச வீட்டு மனை பட்டா கேட்டு ஜி கே மூப்பனார் நகர் நல சங்க தலைவர் தொப்பி செல்லதுரை தலைமையில் 200-க்கும் மேற்பட்ட பொதுமக்கள் மகாத்மா…

குற்றங்களை தடுக்க 36 பீட் ரோந்து இருசக்கர வாகனங்கள் – ஐ.ஜி பாலகிருஷ்ணன் தொடங்கி வைத்தார்.

திருச்சி மாவட்ட ஆயுதப்படை மைதானத்தில் குற்றங்களை தடுக்கும் வகையிலும், பொதுமக்களுக்கு பாதுகாப்பு ஏற்படுத்தவும் 36 ரோந்து காவலர்களுக்கான இருசக்கர வாகனங்ளை காவல்துறை திருச்சி மத்திய மண்டல ஐ.ஜி.பாலகிருஷ்ணன் வழங்கி கொடியசைத்து துவக்கி வைத்தார். அருகில் டி.ஐ.ஜி சரவண சுந்தர், மாவட்ட போலீஸ்…