Month: November 2023

வ.உ.சிதம்பரம் பிள்ளையின் 87ம் ஆண்டு நினைவு தினத்தை முன்னிட்டு அதிமுக சார்பில் முன்னாள் அமைச்சர் கோகுல இந்திரா தலைமையில் அவரது திருஉருவ சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

கப்பலோட்டிய தமிழன் வ உ . சிதம்பரம் பிள்ளை 87-ம் ஆண்டு நினைவு தினத்தை முன்னிட்டு அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் அதிமுக பூத் கமிட்டி மாவட்ட பொறுப்பாளர், கழக அமைப்பு செயலாளர், முன்னாள் அமைச்சர் கோகுல இந்திரா…

வ.உ.சியின் 87ம் ஆண்டு நினைவு தினத்தை முன்னிட்டு திமுக சார்பில் மேயர் அன்பழகன் தலைமையில் அவரது திருஉருவ சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

கப்பலோட்டிய தமிழன் வ உ . சிதம்பரம் பிள்ளை 87-ம் ஆண்டு நினைவு தினத்தை முன்னிட்டு திருச்சி நீதிமன்றம் அருகில் உள்ள அவரது திருஉருவச் சிலைக்கு திமுக சார்பில் மாநகர செயலாளரும், மாநகர மேயருமான அன்பழகன் தலைமையில் திமுகவினர் மாலை அணிவித்து…

கூட்டுறவு வார விழாவை முன்னிட்டு சிறப்பாக பணியாற்றிய கூட்டுறவு சங்கங்களுக்கு பரிசுகள் வழங்கிய அமைச்சர் மகேஷ்.

தமிழ்நாடு முதலமைச்சரின் ஒரு டிரில்லியன் டாலர் பொருளாதாரம் மற்றும் நீடித்த நிலையான வளர்ச்சிக்கான இலக்குகளில் கூட்டுறவு அமைப்புகளின் பங்கு என்னும் தலைப்பில் கடந்த 14ஆம் தேதி முதல் வருகின்ற 20ஆம் தேதி வரை 70-வது அனைத்திந்திய கூட்டுறவு வார விழா கொண்டாடப்பட்டு…

மலக்குடலில் மறைத்து கடத்திய ரூ.1 கோடியே 85 லட்சம் மதிப்புள்ள 3 கிலோ தங்கம் பறிமுதல், ஏர்போர்ட்டில் 3 பேர் கைது.

சர்வதேச திருச்சி விமான நிலையத்தில் இன்று மலேசியா கோலாலம்பூரில் இருந்து வந்த ஏர் ஏசியா விமானத்தில் பயணம் செய்த பயணிகளை விமான நிலைய வான் நுண்ணறிவு பிரிவு சுங்கத்துறை அதிகாரிகள் சோதனை செய்தனர், இப்பொழுது சந்தேகத்திற்கிடமாக வந்த பயணிகள் 3 பேரை…

குழந்தைகள் பாதுகாப்பு தின விழிப்புணர்வு பேரணியில் பங்கேற்ற மாணவிகள்.

தேசிய குழந்தைகள் பாதுகாப்பு, சர்வதேச குழந்தைகள் தினம் குழந்தைகள் வன்முறைகளுக்கு எதிரான தினத்தையொட்டி திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் குழந்தைகள் பாதுகாப்பை வலியுறுத்தி குழந்தைகளுக்கான நடை எனும் விழிப்புணர்வு பேரணியை மாவட்ட ஆட்சியர் பிரதீப்குமார் கொடியசைத்து தொடங்கி வைத்தார். இந்ந…

மறைந்த கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுவுடமை போராளி சங்கரய்யா மறைவிற்கு அமைச்சர் உள்ளிட்ட கூட்டணி கட்சியினர் அஞ்சலி செலுத்தினர்.

102 வயதான முதும்பெறும் சுதந்திரப் போராட்டத் தியாகியும், பொதுவுடமை போராளி சங்கரய்யா உடல் நலக்குறைவு காரணமாக தனது 102வது வயதில் காலமானார். மறைந்த சங்கரய்யா உடலுக்கு சென்னையில் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல்.திருமாவளவன் மற்றும் பல்வேறு…

தேசிய பத்திரிகை யாளர் தின விழாவை முன்னிட்டு திருச்சியில் நடந்த தமிழ்நாடு பத்திரிகை யாளர் நல சங்க விழாவில் அமைச்சர் கே.என்.நேரு பங்கேற்பு.

திருச்சி மத்திய பேருந்து நிலையம் அருகே உள்ள தனியார் அரங்கில் தேசிய பத்திரிக்கையாளர் தினமான இன்று தமிழ்நாடு பத்திரிகையாளர் நலச்சங்கம் சார்பில் தேசிய பத்திரிகையாளர் தின விழா நடைபெற்றது இதில் தமிழகத்தில் உள்ள அனைத்து மாவட்ட பத்திரிக்கை மற்றும் ஊடகத்துறை ஆசிரியர்கள்…

மது மற்றும் போதை பொருட்களால் ஏற்படும் தீமைகள் குறித்த விழிப்புணர்வு பாடல் பாடி அசத்திய பெண் ஆய்வாளர்.

திருச்சி மத்திய பேருந்து நிலையத்தில் மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வை துறையின் சார்பில் மதுபானம் , கள்ளச்சாராயம் அருந்துவதால் மற்றும் போதைப்பொருள் பயன்படுத்துவதால் ஏற்படும் தீமைகள் குறித்து விழிப்புணர்வு கலை நிகழ்ச்சி நடைபெற்றது இதில் திருச்சி மாவட்ட ஆட்சியர் பிரதீப் குமார் கலந்து…

குண்டாசில் பெண் கைது – போலீஸ் கமிஷனர் காமினி அதிரடி..

திருச்சி பாலக்கரை கீழபுதூரில் வாடகைக்கு வீடு எடுத்து, சிறுமிகளை பாலியல் தொழிலில் ஈடுப்படுத்தி வருவதாக பாலக்கரை காவல் நிலையத்திற்கு புகார் அளிக்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து அங்கு சென்ற போலீசார் சிறுமிகளை பாலியல் தொழில் ஈடுபடுத்திய அபிநிஷா, ரவிக்குமார், அசோக், பானு மற்றும்…

வளர்த்தவரின் உடலை எடுக்க விடாமல் பாச போராட்டம் நடத்திய நாய், திருச்சியில் நடந்த நெகிழ்ச்சி சம்பவம்.

திருச்சி மலைக்கோட்டை கீழ ஆண்டாள் வீதி திரு வள்ளுவர் நகரை சேர்ந்தவர் முத்துப்பிள்ளை இவரது மகன் மதியழகன் வயது 55 இவர் கடந்த 30 வருடங்களுக்கு மேலாக மலைக்கோட்டை தாயுமானவர் சுவாமி கோவிலில் சாமி ஊர்வலம் வரும் பொழுது சுவாமியை தூக்கும்…

திருச்சியில் பேரிடர் மீட்பு படை அணியினர் ஒத்திகை நிகழ்ச்சி படங்கள்.

தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் மற்றும் தமிழக காவல்துறை தலைமை இயக்குநரின் உத்திரவின்படி. திருச்சி கிராப்பட்டி அருகே உள்ள தமிழ்நாடு சிறப்பு காவல்படை முதலணியில் 120 பேர் கொண்ட பேரிடர் மீட்பு படை அணியினர்.  தற்பொழுது நிலவி வரும் காலநிலை அவசரம் கருதி…

“புத்தகத் திருவிழாவை” முன்னிட்டு பள்ளி மாணவர்களின் விழிப்புணர்வு பேரணியை கலெக்டர் பிரதீப் குமார் தொடங்கி வைத்தார்.

திருச்சி சத்திரம் பேருந்து நிலையம் அருகில் உள்ள செயிண்ட் ஜோசப் கல்லூரி மைதானத்தில், திருச்சிராப்பள்ளி மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் புத்தகத் திருவிழா வருகிற நவம்பர் 24 முதல் டிசம்பர் 04 வரை நடைபெற உள்ளது. மேலும் செயிண்ட் ஜோசப் கல்லூரி மைதானத்தில்…

திருச்சி தென்னூர் மீர் ஹசனுல்லா ஷா தர்காவை சட்ட விரோதமாக கைப்பற்றி யவர்கள் மீது நடவடிக்கை எடுக்க கோரி நாம் தமிழர் கட்சி சார்பில் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம்.

திருச்சி தென்னூர் மீர் ஹசனுல்லா ஷா தர்காவிற்கு சொந்தமான இடத்தினை போலி பத்திரங்கள் மூலம் சட்டவிரோதமாக கைப்பற்றியவர்களுக்கு எதிராக சென்னை மாவட்ட முதன்மை நீதிமன்றம், தமிழ்நாடு வக்பு வாரியத்திற்கு வழங்கிய நீதிமன்றத் தீர்ப்பினை காவல்துறை நடைமுறைபடுத்த வலியுறுத்தி நாம் தமிழர் கட்சி…

திருச்சி நத்தமாடிப் பட்டி செல்லும் பாதையில் வார சந்தை நடத்த அனுமதிக்க கூடாது என மாநகராட்சி அதிகாரியிடம் சாமானிய மக்கள் நலக் கட்சியினர் மனு அளித்தனர்.

திருச்சி 45வது வார்டு பொன்னேரிபுரம் நத்தமாடிப்பட்டி செல்லும் வழியில் வார சந்தை நடைபெறுவதை ரத்து செய்ய வலியுறுத்தி சாமானிய மக்கள் நலக்கட்சி சார்பில் விவசாய அணி மாவட்ட செயலாளர் ஜோசப் தலைமையில் இன்று காலை திருச்சி மாநகராட்சியில் கோரிக்கை மனு அளிக்கப்பட்டது.…

நேருவின் 134வது பிறந்தநாளை முன்னிட்டு காங்கிரஸ் கமிட்டி சார்பில் மாவட்ட தலைவர் ரெக்ஸ் தலைமையில் அவரது சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.

இந்தியாவின் முதல் பாரத பிரதமர் ஜவஹர்லால் நேரு. இவர் பண்டிட் நேரு மற்றும் பண்டிதர் நேரு என்றும் அழைக்கப் பெற்றார். இவர் குழந்தைகள் மேல் மிகவும் அன்பு கொண்டவர். இவர் பிறந்தநாள் அன்று இந்தியாவில் குழந்தைகள் தினமாக கொண்டாடப்பட்டு வருகிறது. அந்த…

தற்போதைய செய்திகள்