Month: November 2023

திருச்சியில் சாலை வசதி உள்ளிட்ட அடிப்படை வசதிகளை செய்து தராத ஊராட்சி மன்றத் தலைவரை கண்டித்து சேற்றில் நாற்று நடும் போராட்டம் நடத்திய பொதுமக்கள்.

திருச்சி திருவெறும்பூர் அருகே கீழக்குறிச்சி ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட கீழக்கல்கண்டார் கோட்டை அருகே உள்ள முத்துநகர் பகுதியில் தெருவிளக்கு, கழிவு நீர் வாய்க்கால், குடிநீர் வசதி, சாலை வசதி, ஆகிய எந்தவிதமான வசதியும் இங்கு இல்லை எனவும் எனவே இந்தப் பகுதியில்…

விவசாயிகள் மீது பொய் வழக்கு போடும் காவல் துறையை கண்டித்து கலெக்டர் அலுவலகம் முன்பு 100-க்கும் மேற்பட்ட விவசாயிகள் தர்ணா போராட்டம்.

திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் விவசாயிகள் குறை தீர்க்கும் நாள் கூட்டம் மாவட்ட ஆட்சித் தலைவர் பிரதீப் குமார் தலைமையில் இன்று நடைபெற்றது. திருச்சி மற்றும் திருச்சி மாவட்டத்தை சுற்றியுள்ள பல்வேறு பகுதிகளை சேர்ந்த விவசாயிகள் தங்களின் குறைகளை கோரிக்கைகளாக மாவட்ட…

திருச்சி என்.ஆர், ஐ.ஏ.எஸ். அகாடமியில் “தமிழ்” என்ற தலைப்பில் தன்னம்பிக்கை நிகழ்ச்சி இன்று நடைபெற்றது.

திருச்சி திண்டுக்கல் சாலை ராம்ஜி நகர் பகுதியில் உள்ள என்.ஆர். ஐ.ஏ.எஸ். அகாடமியில் மாணவ மாணவிகளை ஊக்குவிக்கும் விதமாக “தமிழ்” என்ற தலைப்பில் தன்னம்பிக்கை நிகழ்ச்சி இன்று நடைபெற்றது. இந்நிகழ்ச்சிக்கு என்.ஆர். ஐ.ஏ.எஸ். அகாடமி இயக்குனர் விஜயாலயன் தலைமை தாங்கினார். இந்நிகழ்ச்சியில்…

ஸ்ரீரங்கம் அறநிலையத் துறை, மாநகராட்சியை கண்டித்து சிபிஐ சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் இன்று நடைபெற்றது.

திருச்சி மாநகர் மாவட்டம் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி ஸ்ரீரங்கம் பகுதிக்குழு சார்பில் ஸ்ரீரங்கம் அறநிலையத்துறை மாநகராட்சியை கண்டித்து ஸ்ரீரங்கம் தேவி தியேட்டர் அருகில் கண்டன ஆர்ப்பாட்டம் பகுதிக்குழு செயலாளர் பார்வதி தலைமை தாங்கினார். இந்த ஆர்ப்பாட்டத்தில் ஏ ஐ டி யு…

தமிழ்நாடு அறிவியல் இயக்கம் மற்றும் புத்தனாம்பட்டி நேரு நினைவு கல்லூரி சார்பில் மாநில அளவிலான தேசிய குழந்தைகள் அறிவியல் மாநாடு திருச்சியில் நடைபெற்றது.

தமிழ்நாடு அறிவியல் இயக்கம் மற்றும் புத்தனாம்பட்டி நேரு நினைவுக் கல்லூரி இணைந்து 31 வது தேசிய குழந்தைகள் அறிவியல் மாநாடு கல்லூரி வளாகத்தில் உள்ள மூக்கப்பிள்ளை அரங்கத்தில் சனி மற்றும் ஞாயிற்று கிழமைகளில் நடைபெற்றது. மாநாட்டிற்கு வரவேற்பு குழு தலைவர் சிவ.வெங்கடேஷ்…

டாக்டர் கலைஞர் நூற்றாண்டு பிறந்தநாள் விழாவை முன்னிட்டு திருச்சி தெற்கு மாவட்ட கழகத்தின் சார்பாக 100 அடி உயர கழக கொடியை அமைச்சர் துரைமுருகன் ஏற்றி வைத்தார்.

முத்தமிழ் அறிஞர் டாக்டர் கலைஞர் அவர்களின் நூற்றாண்டு பிறந்தநாள் விழாவை முன்னிட்டு திருச்சி தெற்கு மாவட்ட கழகத்தின் சார்பாக திருச்சி கிழக்கு தொகுதி கரூர் பைபாஸ் சாலையில் குடமுருட்டி அருகில் 100 அடி உயர கொடி மரத்தில் கழக இரு வர்ண…

திருச்சியில் மாணவர்களின் அறிவுத் திறனை வளர்க்கும் வானவில் மன்றம் – ஆசிரியர்கள் பெருமிதம்.

அரசு பள்ளி மாணவர்களிடையே அறிவியல் மனப்பான்மையை வளர்க்கவும் எதையும் ஆராய்ந்து பார்த்து கேள்வி கேட்கும் பழக்கத்தை உருவாக்கவும், அறிவியல் மற்றும் கணிதம் தொடர்பாக புதியவற்றை அறிந்து கொள்ளும் ஆர்வத்தை உண்டாக்க வேண்டும் என்ற நோக்கில் தமிழக அரசு சார்பில் வானவில் மன்றம்…

கலைஞர் கொடுத்த இடம் புறம்போக்கு இடமா? – பொதுமக்கள் கலெக்டரிடம் மனு.

அரசு கொடுத்த பட்டா அரசு கேசட்டிலும் ஏற்றாத குறித்து திருச்சி மாவட்ட ஆட்சியரிடத்தில் அப்பகுதியை சேர்ந்த பொதுமக்கள் மனு அளித்தனர். தொடர்ந்து செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த செபஸ்தியம்மாள் கூறுகையில்:- திருச்சி மேற்கு தொகுதிக்கு உட்பட்ட நகராட்சி நிர்வாக துறை அமைச்சர் கே.என்.நேருவின்…

திருச்சியில் குட்கா பொருட்களை விற்பனை செய்ததாக 795 பேர் மீது வழக்கு பதிவு கமிஷனர் காமினி பேட்டி.

தமிழக அரசால் தடை செய்யப்பட்ட குட்கா புகையிலை பொருட்கள் விற்பனை செய்வது கண்டறியப்பட்டு திருச்சி காந்தி மார்க்கெட், கோட்டை மற்றும் பாலக்கரை பகுதியில் உள்ள மூன்று கடை உரிமையாளர்கள் மீது நேற்று வழக்குப்பதிவு செய்யப்பட்டது. இந்த கடைகளில் இருந்து இரண்டு மூட்டை…

திருச்சி கோதண்ட ராமர் திருக் கோவில் சார்பாக உலக நன்மை வேண்டி 108 திருவிளக்கை ஏற்றி வைத்து பூஜை செய்த பெண்கள்.

திருச்சி மாவட்டம் நாகமங்கலம் சந்தனத்தான் குறிச்சியில் உள்ள கோதண்டராமர் திருக்கோவிலில் மூன்றாம் ஆண்டு 108 திருவிளக்கு பூஜை இன்று நடைபெற்றது. திருவிளக்கு பூஜையை முன்னிட்டு யாகங்கள் வளர்க்கப்பட்டு கோதண்ட ராமருக்கு சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டன. மேலும் இந்த திருவிளக்கு பூஜையில் கலந்து…

திருச்சி அப்போலோ ஸ்பெஷாலிட்டி மருத்துவ மனை சார்பில் இதய நோய் தொடர்பான மருத்துவ கல்வி கருத்தரங்கு இன்று நடைபெற்றது.

திருச்சி அப்போலோ ஸ்பெஷாலிட்டி மருத்துவமனையின் சார்பில் தனியார் ஹோட்டலில் இதய நோய் தொடர்பான மருத்துவ கல்வி கருத்தரங்கு (CME) இன்று நடைபெற்றது. விழாவில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட அப்போலோ மருத்துவமனையின் மதுரை கோட்ட தலைமை செயல்பாட்டு அதிகாரி, நீலகண்ணன் பேசுகையில்,…

திருச்சி மலைக் கோட்டை உச்சிப் பிள்ளையார் கோவிலில் மகாதீபம் ஏற்றபட்டது.

மகா தீபம் தொடர்ந்து 3 நாட்கள் தொடர்ந்து இரவும் பகலும் எரியும் மகா தீபம் சரியாக ஆறு மணிக்கு ஏற்றப்பட்டது – ஓம் நமச்சிவாயா என பக்தி பரவசத்துடன் ஆயிரக்கணக்கான பக்தர்கள் தரிசனம் செய்தனர் தென்கயிலாயம் என போற்றப்படுவதும், திருச்சி மலைக்கோட்டை…

டாக்டர் கலைஞரின் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு திமுக சட்டத்துறை சார்பில் திருச்சியில் நடந்த பேச்சுப் போட்டி.

முத்தமிழறிஞர் டாக்டர் கலைஞரின் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு திமுக சட்டத்துறை சார்பில் சட்டக் கல்லூரி மாணவர்கள் மற்றும் மூன்று ஆண்டுகளுக்கு உட்பட்ட இளம் வழக்கறிஞர்கள் கலந்து கொள்ளும் பேச்சுப்போட்டி திருச்சி அரசு சட்டக் கல்லூரியில் இன்று நடைபெற்றது..இந்த பேச்சு போட்டியில் திருச்சி…

REHABINDIA CHARITABLE TRUST சார்பாக சிறப்பு குழந்தை களுக்கான ஆடை அலங்கார போட்டி திருச்சியில் நடைபெற்றது.

உலக மாற்றுத்திறனாளிகள் தினத்தை முன்னிட்டு REHABINDIA CHARITABLE TRUST சார்பாக திருச்சி பாரதியார் சாலை பகுதியில் உள்ள கூட்டரங்கில் சிறப்பு குழந்தைகளை ஊக்குவிக்கும் விதமாக சிறப்பு குழந்தைகளுக்கான ஆடை அலங்காரம் போட்டி மற்றும் ஒப்பனைகளை கலைஞர்களுக்கான மாநில அளவிலான போட்டியும் நடைபெற்றது.…

ஹஜ் உம்ரா பயணத்திற்கு சென்னையில் இருந்து ஜித்தாவிற்கு நேரடி விமான சேவையை துவங்க வேண்டும் – தமிழ்நாடு ஹஜ் உம்ரா தனியார் பயண ஏற்பாட்டா ளர்கள் சங்க பொது குழுவில் தீர்மானம்.

தமிழ்நாடு ஹஜ் உம்ரா தனியார் பயண ஏற்பாட்டளர்கள் சங்கம் பொதுக்குழு கூட்டம் திருச்சி கண்டோன்மென்ட் பகுதியில் உள்ள தனியார் மண்டபத்தில் இன்று நடைபெற்றது. இந்த பொதுக்குழு கூட்டத்தில் தமிழ்நாடு ஹஜ் உம்ரா தனியார் ஏற்பாட்டாளர்கள் சங்க மாநில தலைவர் முகமது சபியுல்லா…