Month: February 2024

தேசியக் கொடியுடன் கூடிய அரசு காரில், பதவி இழந்த முன்னாள் அமைச்சர் பொன்முடி பயணம் செய்த சம்பவம் திருச்சியில் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.

கலைஞர் கருணாநிதி நூற்றாண்டு விழாவை முன்னிட்டு, திருச்சி தெற்கு மாவட்ட மாநகர தொமுச சார்பில், மராத்தான் போட்டி இன்று நடைபெற்றது. மராத்தான் போட்டியை, முன்னாள் அமைச்சர் பொன்முடி கொடியசைத்து தொடங்கி வைத்தார். பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி, மாநிலங்களவை…

திருச்சி புறநகர் வடக்கு மாவட்ட எம்.ஜி.ஆர் மன்றம் சார்பில் ஜெயலலிதா பிறந்த நாளையொட்டி நலத்திட்ட உதவிகளை மாவட்ட செயலாளர் பரஞ்ஜோதி வழங்கினார்.

திருச்சி புறநகர் வடக்கு மாவட்ட எம்ஜிஆர் மன்றம் திருவானைக்காவல் பகுதி சார்பில் முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் 76வது பிறந்தாள் விழா கொண்டாடப்பட்டது. திருவானைக்காவல் தெப்பக்குளம் பகுதியில் ஜெயலலிதாவின் உருவப் படத்திற்கு மாலை அணிவித்து, மலர் தூவி மரியாதை செய்யப்பட்டது. பின்னர் தனியார்…

திருச்சி ஹெச்டிஎஃப்சி வங்கிக்கு ரூபாய் 25,000 அபராதம் – நுகர்வோர் நீதிமன்றம் அதிரடி உத்தரவு.

திருச்சி உறையூர் பகுதியைச் சேர்ந்தவர் ஜெகநாதன். டிராவல்ஸ் ஏஜென்சி நடத்தி வரும் இவர், திருச்சி கண்ட்டோன்மென்ட் பகுதியில் செயல்பட்டு வரும் எச்டிஎப்சி வங்கி கிளையில் கணக்கு வைத்துள்ளார். மேலும் அதே வங்கியின் கிரெடிட் கார்டும் பயன்படுத்தி வந்துள்ளார். இந்நிலையில் கடந்த 2019…

திருச்சி பால்பண்ணை அருகே பிளாஸ்டிக் பொம்மை தயாரிக்கும் குடோனில் தீ விபத்து.

திருச்சி பால்பண்ணை விஸ்வாஸ் நகர் முதல் தெருவில், பிளாஸ்டிக் பொருட்களைக் கொண்டு விளையாட்டு பொம்மைகள் தயாரிக்கும் குடோனில் இன்று மதியம் சுமார் 12 மணி அளவில் திடீரென தீப்பிடித்து எறிந்தது. பிளாஸ்டிக் குடோனில் குழந்தைகள் விளையாடக்கூடிய பொம்மை,கார், சைக்கிள் உள்ளிட்ட சிறு…

திருச்சி அதிமுக 25வது வார்டு வட்ட கழகம் சார்பில் முன்னாள் முதல்வர் ஜெயலலிதா 76வது பிறந்தநாளை முன்னிட்டு அன்னதானம் வழங்கினார்.

மறைந்த தமிழக முன்னாள் முதலமைச்சர் புரட்சித்தலைவி ஜெயலலிதாவின் 76 ஆவது பிறந்த நாளை முன்னிட்டு அதிமுக திருச்சி மாநகர 25வது வார்டு வட்ட செயலாளர் பாபு ஏற்பாட்டின் பேரில்  மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா உருவப்படத்திற்கு பாலக்கரை பகுதி செயலாளர் வெல்லமண்டி…

தனி நல வாரியம் அமைக்கக் கோரி இருசக்கர வாகனம் பழுது நீக்குவோர் தொழிற்சங்க ஆண்டு விழா கூட்டத்தில் தீர்மானம்: –

மலைக்கோட்டை மாநகர இருசக்கர வாகன பழுது நீக்குவோர் தொழிற்சங்க திருச்சி மாவட்டம் சார்பில் ஆண்டு விழா திருச்சி பொன்மலைப்பட்டி ரோடு ஸ்ரீராம் மஹாலில் இன்று நடைபெற்றது. இதில் மாவட்ட பொருளாளர் செல்வமணி வரவேற்புரை ஆற்றிட, இருசக்கர வாகன பழுது நீக்குவோர் தொழில்…

கலைஞர் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு மாரத்தான் போட்டியை முன்னாள் அமைச்சர் பொன்முடி தொடங்கி வைத்தார்.

முத்தமிழறிஞர் தலைவர் டாக்டர் கலைஞர் அவர்களின் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு திருச்சி தெற்கு மாவட்ட மாநகர தொமுச சார்பாக மாரத்தான் போட்டி இன்று நடைபெற்றது இந்த மாரத்தான் போட்டியை முன்னாள் அமைச்சர் பொன்முடி கொடி அசைத்து தொடங்கி வைத்தார் அருகில் தமிழக…

பாஜக திருச்சி நாடாளுமன்ற தொகுதி இணை பொறுப்பாளர் ஆர்.ஜி.ஆனந்த் திருச்சி உறையூர் பகுதியில் சூறாவளி சுற்றுப் பயணம் மேற்கொண்டார்.

பாரதிய ஜனதா கட்சியின் தேசிய செயற்குழு உறுப்பினரும், திருச்சி நாடாளுமன்ற தொகுதி இணை பொறுப்பாளருமான டாக்டர் ஆர்.ஜி.ஆனந்த் திருச்சி நாடாளுமன்ற தொகுதியில் சூறாவளி சுற்றுப்பயணம் மேற்கொண்டு நிர்வாகிகள் பொதுமக்களை சந்தித்து ஊக்கப்படுத்தி வருகிறார். அந்த வகையில் திருச்சி உறையூர் மண்டல் பகுதியில்…

ரயில்வே கோட்டத்தில் ரூ.224.94 கோடி மதிப்பில் புதிய மேம்பாலங்கள் – திருச்சி கோட்ட ரயில்வே மேலாளர் அன்பழகன் பேட்டி:-

திருச்சி ரயில்வே கோட்ட மேலாளர் அலுவலகத்தில் இன்று செய்தியாளர்களை சந்தித்த ரயில்வே கோட்ட மேலாளர் அன்பழகன்…. வரும் 26ம் தேதி, நாடு முழுவதும் அம்ரித் பாரத் திட்டத்தில், 554 ரயில்வே ஸ்டேஷன்கள், 1,500க்கும் மேற்பட்ட ரயில்வே மேம்பாலங்கள், தரைமட்ட பாலங்களை பிரதமர்…

ஜெயலலிதா 76 வது பிறந்த நாளை முன்னிட்டு அம்மா பேரவை மாநில துணை செயலாளர் அரவிந்தன் தலைமையில் நலத்திட்ட உதவிகள் மற்றும் அன்னதானம் வழங்கப்பட்டது.

மறைந்த தமிழக முன்னாள் முதலமைச்சர் புரட்சித்தலைவி ஜெயலலிதாவின் 76 ஆவது பிறந்த நாளை முன்னிட்டு தமிழக முழுவதும் அதிமுக சார்பில் ஏழை எளிய பொதுமக்களுக்கும், பள்ளி மாணவ மாணவிகளுக்கு நலத்திட்ட உதவிகள் மற்றும் அன்னதானம் வழங்கப்பட்டு வருகிறது. அதன் ஒரு பகுதியாக…

முன்னாள் முதல்வர் ஜெயலலிதா 76வது பிறந்த நாளை முன்னிட்டு மாவட்ட செயலாளர் சீனிவாசன் தலைமையில் மலர் தூவி மரியாதை செலுத்தினர்.

மறைந்த தமிழக முதல்வர் ஜெயலலிதாவின் 76 ஆவது பிறந்த நாளை முன்னிட்டு, அதிமுக திருச்சி மாநகர் மாவட்ட கழகம் சார்பில், மாவட்ட கழக செயலாளர் சீனிவாசன் தலைமையில், திருச்சி நீதிமன்றம் அருகே உள்ள எம்ஜிஆர் சிலை முன்பு அமைக்கப்பட்டு இருந்த ஜெயலலிதா…

திடீர் மாரடைப்பால் பலியான திருச்சி போலீஸ்:-

திருச்சி, ஸ்ரீரங்கம் காவல் நிலையத்தில் பணியாற்றி வரும் விநாயகமூர்த்தி ஸ்ரீரங்கத்தில் உள்ள காவலர் குடியிருப்பில் வசித்து குடும்பத்துடன் வசித்து வருகிறார். இன்று அவர் வீட்டில் இருந்தபோது திடீரென்று மயக்கம் வருவதாக கூறி உள்ளார்.  உடனடியாக அவருடைய மனைவி 108 ஆம்புலன்ஸ்க்கு தகவல்…

ஜெயலலிதா 76வது பிறந்த நாள் விழா அதிமுக திருச்சி மாவட்ட செயலாளர் சீனிவாசன் தலைமையில் பள்ளி மாணவ மாணவி களுக்கு அன்னதானம்.

மறைந்த தமிழக முன்னாள் முதலமைச்சர் புரட்சித்தலைவி ஜெயலலிதாவின் 76 ஆவது பிறந்த நாளை முன்னிட்டு திருச்சி மாநகர் மாவட்டம் காஜாபேட்டை பகுதிக்கு உட்பட்ட 26 ஆவது வார்டு வட்டக் கழக செயலாளர் சுந்தரவடிவேல் ஏற்பாட்டின் பேரில் முதலியார் சத்திரம் டி இ…

விவசாயிகள் மீது கொடூரத் தாக்குதல் நடத்திய மத்திய பாஜக அரசை கண்டித்து திருச்சியில் விவசாயிகள் கருப்பு கொடியேந்தி ஆர்ப்பாட்டம்:-

விளைப் பொருட்களுக்கு ஆதார விலை, விவசாயக் கடன் தள்ளுபடி, விவசாயிகளுக்கு ஓய்வூதியம், மின்சார சட்டத்திருத்த மசோதா ரத்து, விவசாயிகள் மீது பதியப்பட்ட வழக்குகள் ரத்து உள்ளிட்ட கோரிக்கைகளை முன்வைத்து விவசாயிகள் டெல்லியில் போராட்டம் நடத்தி வருகின்றனர். இந்த நிலையில், டெல்லிக்குள் விவசாயிகள்…

திருச்சி ஸ்ரீ ராஜகணபதி ஆலயத்தின் 47ம் ஆண்டு திருவிழாவை முன்னிட்டு அன்னதானம் விழா இன்று நடைபெற்றது.

திருச்சி கான்வென்ட் ரோடு பகுதியில் உள்ள அருள்மிகு ஸ்ரீ ராஜகணபதி அருள்மிகு முன்னுடையான் அருள்மிகு மாசி சப்பானி கருப்பண்ண சுவாமி அன்னை முத்துமாரியம்மன் திருக்கோவிலின் 47 ஆம் ஆண்டு திருவிழா கடந்த ஆறாம் தேதி மஞ்சள் காப்பு கட்டி தொடங்கப்பட்டது. அதனைத்…