Month: July 2024

திமுக அரசின் சட்டம் ஒழுங்கு சீர்கேட்டை கண்டித்து பொது மக்களுக்கு துண்டு பிரசுரம் வழங்கிய முன்னாள் அமைச்சர்கள்:-

திருச்சி, ஸ்ரீரங்கம் பகுதி மற்றும் திருவானைக்காவல் பகுதி கழகத்தின் சார்பில் ஸ்ரீரங்கம் ராகவேந்திரா வளைவு முதல் தேவி தியேட்டர் வரை திமுக அரசின் சட்டம் ஒழுங்கு சீர்கேட்டை கண்டித்து, பொதுமக்களிடம் விழிப்புணர்வு துண்டு பிரசுரம் வழங்கப்பட்டது. திருச்சி புறநகர் வடக்கு மாவட்ட…

ஸ்ரீமத் ஆண்டவன் கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் முதலாம் ஆண்டு மாணவர் வரவேற்பு நிகழ்ச்சி – ஸ்ரீ வராக மகா தேசிகன் சுவாமிகள் பங்கேற்பு:-

ஸ்ரீமத் ஆண்டவன் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் முதலாம் ஆண்டு மாணவ மாணவிகளை வரவேற்கும் நிகழ்வு கல்லூரி வளாகத்தில் உள்ள கூட்ட அரங்கில் இன்று நடைபெற்றது. இந்த நிகழ்ச்சிக்கு கல்லூரி துணை முதல்வர் முனைவர் ஜோதி வரவேற்புரை ஆற்றிட ஸ்ரீமத் ஆண்டவன்…

திருச்சி மாவட்ட காங்கிரஸ் செயல் வீரர்கள் கூட்டம் வருகிற 19ம் தேதி நடைபெறுவது குறித்த ஆலோசனைக் கூட்டம் தலைவர் ரெக்ஸ் தலைமையில் இன்று நடைபெற்றது:-

திருச்சி மாவட்ட காங்கிரஸ் செயல் வீரர்கள் கூட்டம் வருகின்ற 19ம் தேதி வெள்ளிக்கிழமை காலை 9 மணி அளவில் எல் கே எஸ் மஹாலில் நடைபெற உள்ளது. இந்த காங்கிரஸ் செயல் வீரர்கள் கூட்டத்திற்கு தமிழ்நாடு காங்கிரஸ் மாநிலத் தலைவர் செல்வபெருந்தகை,…

திருச்சியில் அனுமதியின்றி கட்டப்பட்ட 10க்கும் மேற்பட்ட கடைகள் அகற்றம் – போலீஸ் குவிப்பு:-

திருச்சி பழைய பால்பண்ணை அருகே மாநகராட்சி அனுமதி இன்றி கட்டப்பட்ட 15 க்கும் மேற்பட்ட கடைகளை திருச்சி மாநகராட்சி அதிகாரிகள் அகற்றினர். வாடகைதாரர்கள் எதிர்ப்பு தெரிவித்ததால் போலீஸ் பாதுகாப்புடன் கடைகள் அகற்றப்பட்டது. இடத்தின் உரிமையாளர் பாலசுப்ரமணியம் என்பவர் தொடர்ந்த வழக்கின் அடிப்படையில்…

காமராஜரின் 122 வது பிறந்த தினத்தை முன்னிட்டு திருச்சி துவாக்குடி மண்டல் பா.ஜ.க சார்பாக அவரது திருவுருவ சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்:-

கர்ம வீரர் காமராஜர் அவர்களின் 122 வது பிறந்த தினத்தை முன்னிட்டு திருச்சி மாவட்டம் துவாக்குடி மண்டல் பாரதிய ஜனதா கட்சி சார்பாக BHEL பகுதியில் உள்ள அவரது திருவுருவ சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தி கொண்டாடபட்டது. இந்நிகழ்விற்கு பாஜக…

திருச்சி லால்குடி புனித கபிரியேல் அரசு உதவி பெறும் நடுநிலைப் பள்ளியில் காலை உணவு திட்டத்தை பெரம்பலூர் எம்பி அருண் நேரு தொடங்கி வைத்தார்.

இன்று ஜூலை 15ம் தேதி கல்விக் கண் திறந்த கர்ம வீரர் காமராஜர் பிறந்த நாளை முன்னிட்டு இன்று காலை தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், திருவள்ளூர் மாவட்டம் கடம்பத்தூர் ஊராட்சி ஒன்றியத்தில் கீழச்சேரியில் உள்ள அரசு உதவி பெறும் தொடக்கப்பள்ளியில் காலை…

புதிய பென்சன் திட்டத்தை ரத்து செய்ய வலியுறுத்தி எஸ்.ஆர்.எம்.யூ தொழிற் சங்கத்தின் து.பொ.செ வீரசேகரன் தலைமையில் ஆர்ப்பாட்டம்:-

புதிய பென்சன் திட்டத்தால் அரசு ஊழியர்கள் ஓய்வு பெறும் போதும், ஓய்வூதியம் பெறும் போதும் அவர்களுக்கான பண பலன்கள் கிடைக்காது எனவே புதிய பென்சன் திட்டத்தை ரத்து செய்து பழைய பென்சன் திட்டத்தையே நடைமுறைப்படுத்த வேண்டும், ரெயில்வே துறையை தனியாரிடம் ஒப்படைக்க…

திருச்சியில் தனியார் பேருந்து விபத்து 10-க்கும் மேற்பட்ட பயணிகள் படுகாயம்:-

திருச்சி குண்டூர் பகுதியில் உள்ள சிமெண்ட் ஆலை அருகே புதுக்கோட்டையில் இருந்து திருச்சி நோக்கி அதிவேகமாக வந்த தனியார் பேருந்து ஒன்று சாலையில் முன்பு சென்று கொண்டிருந்த காரை முந்தி செல்ல முயன்ற போது சிமெண்ட் ஆலை முன்பு நிறுத்தி வைக்கப்பட்டிருந்த…

இந்தியாவில் இருந்து இலங்கைக்கு கப்பல் சேவைக்கான அனைத்து முயற்சிகளும் மேற்கொள்ளப் பட்டு வருகிறது – ஸ்ரீலங்கா எம்பி ரவூப் ஹக்கீம் பேட்டி:-

ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சியின் தலைவரும், கண்டி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் ரவூப் ஹக்கீம் தஞ்சாவூர் மாவட்டம் ராஜகிரியில் உள்ள ஆர்.டி.பி கல்லூரி பட்டமளிப்பு விழாவில் கலந்து கொள்வதற்காக இன்று காலை கொழும்பில் இருந்து விமானம் மூலமாக திருச்சி விமான நிலையத்திற்கு…

சென்னை TPI வளாகத்தை முற்றுகையிட்டு போராட்டம். டிட்டோஜாக் ஆலோசனை கூட்டத்தில் அறிவிப்பு:-

தமிழ்நாடு தொடக்கக் கல்வி ஆசிரியர் இயக்கங்களின் கூட்டு நடவடிக்கை குழு ஆலோசனைக் கூட்டம் திருச்சி மத்திய பேருந்து நிலையம் அருகே இன்று மதியம் 3 மணிக்கு நடந்தது. இந்த ஆலோசனை கூட்டத்தில், டிட்டோஜேக் மாநில அமைப்பின் சார்பில் 31 அம்ச கோரிக்கைகளை…

திருச்சியில் வாகன சோதனையில் 1.கிலோ கஞ்சா பறிமுதல்:-

திருச்சியில் கஞ்சா கடத்தி வரப்படுவதாக மதுவிலக்கு அமலாக்க பிரிவு போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது அதன்படி மதுவிலக்கு அமலாக்க பிரிவு காவல் ஆய்வாளர் சுப்புலட்சுமி தலைமையில் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்பொழுது இருசக்கர வாகனத்தில் வந்த தென்னூரை சேர்ந்த ஹமீத்…

வாசவி கிளப் இன்டர் நேஷனல் சார்பாக இலவச மருத்துவ முகாம் திருச்சியில் இன்று நடைபெற்றது.

வாசவி கிளப் இன்டர்நேஷனல் சார்பாக வாசவி கிளப் வனிதா திருச்சி மற்றும் வாசவி கிளப் எலைட் கபில்ஸ் திருச்சி மற்றும் அப்போலோ மருத்துவமனை இணைந்து திருச்சி உறையூர் வெக்காளியம்மன் கோவில் அருகே உள்ள அரபிந்தோ இன்டர்நேஷனல் பள்ளியில் ஆரோக்கியம் 2024 என்ற…

திருச்சி ஏர்போர்ட் வந்த சிங்கப்பூர் பயணிகளிடம் ஒரு கிலோ தங்கம் பறிமுதல்.

திருச்சி சர்வதேச விமான நிலையத்திற்கு உள்ளூர் மற்றும் வெளிநாடுகளுக்கு விமானங்கள் இயக்கப்பட்டு வருகிறது.இந்த விமானங்களில் பயணிக்க கூடிய பயணிகள் பலரிடமிருந்து கடத்தல் தங்கம் பறிமுதல் செய்யப்பட்டு வருகிறது. இந்த நிலையில், சிங்கப்பூரிலிருந்து இண்டிகோ விமானம் திருச்சி விமான நிலையம் வந்தது. இதில்…

திருச்சியில் ஶ்ரீ அமுராதி சிட்ஸ் (பி) லிமிடெட் திறப்பு விழா நடைபெற்றது

கடந்த 2008 ஆம் ஆண்டு முதல் செயல்பட்டு வரும் ஶ்ரீ அமுராதி சிட்ஸ் (பி) லிமிடெட் நிறுவனம் புத்தானத்தம், ஆலம்பட்டி புதூர் ஆகிய பகுதிகளை தொடர்ந்து திருச்சி மாநகரில் தனது கிளையை தொடங்கியுள்ளது. புதிய கிளையின் திறப்பு விழா திருச்சி கண்டோன்மெண்ட்…

காங்கிரஸ் தலைவர் உருவப் படத்தை எரித்து பாஜகவினர் திருச்சியில் போராட்டம்:-

தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை மற்றும் தமிழக காங்கிரஸ் மாநில தலைவர் செல்வப் பெருந்தகை இடையே கருத்து மோதல் ஏற்பட்டு வருகிறது இதன் காரணமாக காங்கிரஸ் கட்சினர் மற்றும் பாஜகவினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த நிலையில் நேற்று திருச்சி வேலுச்சாமி…

தற்போதைய செய்திகள்