Month: January 2025

ஸ்ரீரங்கம் வைகுண்ட ஏகாதசி பெருவிழா முன்னிட்டு சிறப்பு அலங்காரத்தில் நம்பெருமாள் சொர்க்க வாசலை கடந்து சென்றார் – லட்சக் கணக்கான பக்தர்கள் தரிசனம்:-

108 வைணவ தலங்களில் முதன்மையானதும் பூலோக வைகுண்டம் என போற்றப் படுவதுமான ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலில் ஆண்டு தோறும் பல்வேறு விழாக்கள் நடந்தாலும் வைகுண்ட ஏகாதசி விழா உலக சிறப்பு வாய்ந்தவையாகும். இந்தாண்டு வைகுண்ட ஏகாதசி விழா கடந்த மாதம் 30…

யார்? அந்த சார்? ஸ்டிக்கர் பிரச்சாரத்தை அதிமுக திருச்சி மாவட்ட செயலாளர் சீனிவாசன் தொடங்கி வைத்தார்:-

அண்ணா பல்கலை கழக மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட விவகாரம், தி.மு.க., அரசுக்கு பெரும் நெருக்கடியை ஏற்படுத்தி வருகிறது இந்நிலையில், ‘யார் அந்த சார்?’ என்று அனைத்து அரசியல் கட்சியினர் சமூக அமைப்புகள் மாணவர்கள் அமைப்பினர் தற்போது கேள்வி எழுப்பி வருகின்றனர்.…

ஸ்ரீமத் ஆண்டவன் கலை, அறிவியல் கல்லூரியில் சமத்துவ பொங்கல் இன்று கொண்டாடப் பட்டது:-

தமிழர்களின் பாரம்பரிய விழாவான பொங்கல் விழாவை சிறப்பாக கொண்டாட அனைத்து தரப்பினரும் தயாராகி வருகின்றனர். தமிழ் சமுதாயத்தின் பண்பாட்டை உலகுக்கு உணர்த்தும் வகையில், தைத்திங்கள் முதல்நாள் தமிழர்திருநாள் என ஆண்டுதோறும் தமிழகத்தின் அனைத்து பகுதிகளிலும் பொங்கல் திருநாள் என எழுச்சியுடன் கொண்டாடப்பட்டு…

திருச்சியில் பொங்கல் பரிசு தொகுப்பை பொது மக்களுக்கு கலெக்டர் பிரதீப் குமார் வழங்கினார்:-

தமிழக அரசின் பொங்கல் பரிசு தொகுப்பை பொதுமக்களுக்கு விநியோகிக்கும் பணியை இன்று திருச்சி பெரிய மிளகு பாறை பகுதியில் மாவட்ட ஆட்சித் தலைவர் பிரதீப் குமார் துவக்கி வைத்தார். இந்நிகழ்ச்சியில் திருச்சி மாநகராட்சி மேயர் அன்பழகன், வார்டு கவுன்சிலர் புஷ்பராஜ் உள்ளிட்ட…

திருச்சி மாநகராட்சியுடன் புங்கனூர் இணைப்புக்கு எதிர்ப்பு தெரிவித்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்ட கிராம மக்களால் பரபரப்பு:-*

தமிழகத்தில் 16 மாநகராட்சிகள் எல்லை விரிவாக்கப்படும் என அரசு அறிவித்துள்ளது. அதன்படி திருச்சி மாநகராட்சியின் எல்லைக்கு அருகே உள்ள 22 ஊராட்சிகள் மாநகராட்சியுடன் இணைக்கப்படும் என அரசாணை வெளியிடப் பட்டுள்ளது. இதனால் பல்வேறு கிராம மக்கள் ஆங்காங்கே போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.…

ஆளுநர் ஆர்.என்.ரவியை கண்டித்து ம.க.இ.க மற்றும் பு.ஜ.தொ.மு தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம் திருச்சியில் இன்று நடைபெற்றது.

இந்த ஆண்ட தமிழக சட்டப்பேரவையின் முதல் கூட்டம் தொடங்கியது. அதில் முதல் நிகழ்ச்சியாக தமிழ்த்தாய் வாழ்த்து பாடப்பட்டது. அதற்கு பிறகு ஆளுநர் உரை வாசிக்க துவங்கியபோது ஆளுநர் ஆர்.என்.ரவி அவர்கள் அவரது உரையை படிக்காமல் சட்டசபையை விட்டு அவசரஅவசரமாக வெளியேறினார். அதற்கு…

ஜிஎஸ்டி வரி விதிப்பு கண்டித்து தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரவை சார்பில் திருச்சியில் கண்டன ஆர்ப்பாட்டம்:-

திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகில் இன்று தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரவை சார்பில் மாவட்ட தலைவர் பாபு தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது இந்த ஆர்ப்பாட்டத்தில் மாநில தலைவர் சௌந்தர்ராஜன், பொதுச் செயலாளர் மெஸ்மர் காந்தன், பொருளாளர் பீர்முகமது,உள்ளிட்ட மாநில…

தமிழக ஆளுநரை கண்டித்து திருச்சி திமுக சார்பில் மேயர் அன்பழகன் தலைமையில் நடந்த கண்டன ஆர்ப்பாட்டம் 300-க்கும் மேற்பட்டோர் பங்கேற்பு:-

தமிழ்நாடு ஆளுநர் ஆ. ன்.ரவி தொடர்ந்து தமிழ்த்தாய் வாழ்த்தையும், தமிழ்நாட்டையும் அவமரியாதை செய்து வருவதை கண்டித்து திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு மத்திய மாவட்ட செயலாளர் வைரமணி தலைமையில் மாநகர செயலாளர் மேயர் அன்பழகன் முன்னிலையில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம்…

திருச்சி மாவட்ட, மாநகராட்சி வாக்காளர் இறுதி பட்டியலை கலெக்டர், மேயர் ஆகியோர் வெளியிட்டனர்:-

இந்திய தேர்தல் ஆணையத்தின் உத்தரவுப்படி இன்று வாக்காளர் பட்டியல் சிறப்பு சுருக்க முறை திருத்தம் வெளியிடப்பட்டது அதன்படி திருச்சி மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் மாவட்ட கலெக்டர் பிரதீப் குமார் இறுதி வாக்காளர் பட்டியலை வெளியிட அனைத்து அரசியல் கட்சி பிரமுகர்கள் பெற்றுக்…

மாநகராட்சி இணைப்புக்கு எதிர்ப்பு தெரிவித்து ஸ்ரீரங்கம் எம்எல்ஏ பழனியாண்டி வீட்டை முற்றுகையிட முயன்ற பொது மக்களை போலீசார் தடுத்து நிறுத்தியதால் சாலை மறியல் போராட்டம்:-

தமிழகத்தில் 16 மாநகராட்சிகள் எல்லை விரிவாக்கப்படும் என அரசு அறிவித்துள்ளது. அதன்படி திருச்சி மாநகராட்சியின் எல்லைக்கு அருகே உள்ள 22 ஊராட்சிகள் மாநகராட்சியுடன் இணைக்கப்படும் என அரசாணை வெளியிடப் பட்டுள்ளது. இதனால் பல்வேறு கிராம மக்கள் ஆங்காங்கே போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.…

நல வாரியம் அமைக்க வேண்டும் என தமிழ்நாடு மேடை மெல்லிசை கலைஞர்கள் சங்கத்தினர் தமிழக அரசிடம் கோரிக்கை:-

திருச்சி மத்திய பேருந்து நிலையம் அருகே உள்ள தனியார் திருமண மண்டபத்தில் தமிழ்நாடு மேடை மெல்லிசை கலைஞர்கள் சங்கம் சார்பில் 2022/24 ஆண்டுக்கான சங்கத்தின் பொதுக்குழு மற்றும் 2025 ஆண்டு அடையாள அட்டை வழங்கும் விழா மற்றும் நிர்வாகிகள் தேர்தல் இன்று…

சிபிஎம் மாநில செயலாளர் பாலகிருஷ்ணன் கூறிய கருத்து தான் தமிழகத்தில் உள்ள அனைத்து கட்சிகளின் கருத்தாக உள்ளது – திருச்சியில் டி.டி.வி தினகரன் பேட்டி:-

திருச்சி மாவட்டத்தில் உள்ள அனைத்து சட்டமன்ற தொகுதி அ.ம.மு.க நிர்வாகிகளுடனான ஆலோசனை கூட்டம் திருச்சியில் இன்று நடைபெற்றது. கட்சியின் பொதுச்செயலாளர் டி.டி.வி தினகரன் தலைமையில் நடந்த கூட்டத்தில் மாவட்ட நிர்வாகிகள், சட்டமன்ற தொகுதி நிர்வாகிகள் கலந்து கொண்டனர். கூட்டத்திற்கு முன்பாக செய்தியாளர்களை…

தனி நல வாரியம் அமைக்க வேண்டும் – தமிழக அரசுக்கு தமிழ்நாடு திருமண அலங்கரிப்பாளர்கள் சங்கம் கோரிக்கை:-

தமிழ்நாடு திருமண அலங்கரிப்பாளர்கள் சங்கத்தின் நிர்வாகிகள் செயற்குழு கூட்டம் மற்றும் சிறந்த மேடை அலங்கரிப்பாளர் களுக்கான போட்டி மற்றும் விருது வழங்கும் விழா திருச்சி திருவானைக்காவல் ஸ்ரீமத் ஆண்டவன் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் இன்று நடைபெற்றது. இந்த கூட்டத்திற்கு மாநிலத்…

திருச்சி எம்.ஐ.இ.டி. பொறியியல் கல்லூரியின் 22-ஆம் ஆண்டு பட்டமளிப்பு விழா – 224 மாணவர்கள் பட்டங்கள் பெற்றனர்:-

திருச்சி எம்.ஐ.இ.டி. பொறியியல் கல்லூரியின் 22-ஆம் ஆண்டு பட்டமளிப்பு விழா கல்லூரி வளாகத்தில் உள்ள கூட்டரங்கில் நடைபெற்றது. இவ்விழாவிற்கு எம்.ஐ.இ.டி. கல்வி நிறுவனங்களின் தலைவர் அல்ஹாஜ் முகமது யூனுஸ் தலைமை வகித்து தலைமை உரையாற்றினார். எம்.ஐ.இ.டி கல்வி நிறுவனங்களின் துணைத்தலைவர் முனைவர்…

வேளாண் விளைபொருள் ஆதாய விலை நிர்ணய சட்டம் இயற்றக்கோரி – நீர் ஆதார நலத்திட்ட மேலாண்மை செயற்குழு கூட்டத்தில் தீர்மானம் நிறை வேற்றப்பட்டது:-

நீர் ஆதார நலத்திட்ட மேலாண்மை சார்பில் மாநில செயற்குழு கூட்டம் திருச்சி மத்திய பேருந்து நிலையம் அருகே உள்ள ஹோட்டல் தமிழ்நாட்டில் உள்ள கூட்ட அரங்கில் இன்று நடைபெற்றது. இந்த செயற்குழு கூட்டத்தில் ஒருங்கிணைப்பாளர் யோகநாதன் வரவேற்புரை ஆற்றிட தமிழக ஆறுகள்…