Month: February 2026

திருச்சி சில்வர் லைன் மருத்துவமனையில் மேம்படுத்தப்பட்ட கேத் லேப் மற்றும் ரோபோட்டிக் இதய நிறுவனம் துவக்கம்:-

திருச்சி சில்வர் லைன் மருத்துவமனை தனது நவீன மேம்பட்ட கேத் லேப் மற்றும் தென் தமிழ்நாட்டில் முதல் ரோபோட்டிக் இதய நிறுவனத்தை இன்று துவங்கியது. 24 மணி நேரமும் செயல்படும் இந்த மேம்பட்ட கேத் லேப் மூலம் மாரடைப்பு நோயாளிகளுக்கு உடனடி…

திருச்சி மாவட்ட 9 சட்டமன்ற தொகுதிகளிலும் த.வெ.க. வெற்றி பெறும் – பாசறை கூட்டத்தில் முன்னாள் அமைச்சர் கு.ப. கிருஷ்ணன் பேச்சு:-

2026ம் ஆண்டு சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு தமிழக வெற்றிக் கழகம் சார்பில் திருச்சி மாவட்டம் 9 சட்டமன்றத் தொகுதிகளுக்கான பாசறை கூட்டம் திருச்சி மதுரை தேசிய நெடுஞ்சாலை பஞ்சப்பூர் அருகே உள்ள தனியார் திருமண மண்டபத்தில் நேர்தல் கண்காணிப்பாளர், முன்னாள் அமைச்சர்…

திமுக கூட்டணியில் எங்களுக்கு கூடுதல் தொகுதிகள் கேட்போம் – திருச்சியில் தவாக தலைவர் வேல்முருகன் பேட்டி:-

தமிழக வாழ்வுரிமை கட்சி டெல்டா மாவட்ட கலந்தாய்வு கூட்டம் திருச்சி தாஜ் திருமண மண்டபத்தில் அக்கட்சியின் தலைவர் வேல்முருகன் தலைமையில் நடைபெற்றது . இதில் திருச்சி, புதுக்கோட்டை, மயிலாடுதுறை, அரியலூர், பெரம்பலூர், நாகை, திருவாரூர், தஞ்சை, கரூர் மாவட்டங்களைச் சேர்ந்த நிர்வாகிகள்…

ஜெயலலிதா அவர்களின் 78வது பிறந்த நாளை முன்னிட்டு அவரது திரு உருவப்படத்திற்கு அதிமுக திருச்சி மாநகர் மாவட்ட செயலாளர் சீனிவாசன் தலைமையில் அதிமுகவினர் மலர் தூவி மரியாதை செலுத்தினர்:-

மறைந்த தமிழக முன்னாள் முதல்வர் புரட்சித்தலைவி ஜெயலலிதா அவர்களின் 78 வது பிறந்த நாளை முன்னிட்டு திருச்சி அதிமுக மாநகர் மாவட்ட கழகம் சார்பில் மாநகர் மாவட்ட கழகச் செயலாளரும் முன்னாள் துணை மேருமான சீனிவாசன் தலைமையில் திருச்சி நீதிமன்றம் அருகே…

லால்குடி நீதிமன்றத்துக்கு இடம் வழங்கக்கோரி திருச்சி நீதிமன்றம் முன்பு வழக்கறிஞர்கள் உண்ணாவிரத போராட்டம்:-

திருச்சி வழக்கறிஞர்கள் சங்க அவசர பொதுக்குழுக் கூட்டம் திருச்சி நீதிமன்றத்தில் உள்ள சங்க அலுவலகத்தில் நடைபெற்றது. இதில் பிப்.24, பிப்.25 ஆகிய 2 நாட்கள் நீதிமன்ற பணியிலிருந்து விலகி திருச்சி நீதிமன்ற நுழைவாயில் முன்பாக ஒருங்கிணைந்த நீதிமன்ற திருச்சி வழக்கறிஞர்கள் சங்கத்தினர்…

விஜய் அவருக்கு எழுதி கொடுப்பதை வாசிக்கிறார் – விசிக தலைவர் திருமாவளவன் பேட்டி:-

வி.சி.க தலைவர் திருமாவளவன் திருச்சி விமான நிலையத்தில் பேட்டியளிக்கையில் கூறியதாவது:- அதிமுக ஆட்சிக்கு வராது என்கிற நம்பிக்கையில் எடப்பாடி பழனிச்சாமி தேர்தல் அறிக்கையை வெளியிட்டுள்ளார். அவரின் அறிவிப்பு தேர்தலில் எந்த தாக்கத்தையும் ஏற்படுத்தாது. விஜய் அவருக்கு எழுதி கொடுப்பதை வாசிக்கிறார். கொள்கை…

ஜெயலலிதாவின் 78-வது பிறந்தநாள் விழா – ஆதரவற்ற குழந்தைகளுக்கு அன்னதானம் வழங்கிய அதிமுக திருச்சி மாநகர் மாவட்ட செயலாளர் சீனிவாசன்:-

அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்ற கழகப் பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி அவர்களின் ஆணைக்கிணங்க மறைந்த முன்னாள் முதலமைச்சர் புரட்சித்தலைவி ஜெயலலிதா அவர்களின் 78 வது பிறந்த நாளை கொண்டாடும் விதமாக திருச்சி மாநகர் மாவட்ட கழகம் சார்பில் மாநகர் மாவட்ட…

தமிழ்நாடு மூத்தோர் தடகள சங்கத்தின் மாநில பொதுக்குழு கூட்டம் திருச்சியில் இன்று நடைபெற்றது:-

தமிழ்நாடு மூத்தோர் தடகள சங்கத்தின் மாநில பொதுக்குழு கூட்டம் திருச்சியில் தமிழ்நாடு ஓட்டலில் தலைவர் கிருஷ்ணசாமி வாண்டையார் தலைமையில் நடைபெற்றது. பொதுச்செயலாளர் அன்பழகன் முன்னிலை வகித்தார்.துணைத் தலைவர்கள் ராமசாமி, சிவகிருபா, இணைச் செயலாளர்கள் மைக்கேல், பார்த்திபன், நல்லுசாமி அண்ணாவி, மதியன் வெங்கடேசன்,கமிட்டி…

வரும் மார்ச் 11ம் தேதி திருச்சிக்கு பிரதமர் மோடி வருகை – பாஜக மாநில பொதுச் செயலாளர் கருப்பு முருகானந்தம் தகவல்:-

சட்டமன்ற தேர்தல் நெருங்கும் நேரத்தில் அதிமுக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணியில் பாஜ, பாமக, அமமுக, ஐஜேகே, புதிய நீதிக்கட்சி உள்ளிட்ட கட்சிகள் இடம் பெற்றுள்ளன. இந்த கூட்டணி சார்பில், செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகத்தில் கடந்த மாதம் 23ந் தேதி முதலாவது…

பாஜக பட்டியல் அணி சார்பில் திமுக அரசை கண்டித்து திருச்சியில் கூட்டணி கட்சியினர் பங்கேற்ற கண்டன ஆர்ப்பாட்டம்:-

திருச்சி பாரதிய ஜனதா கட்சியின் பட்டியல் அணி சார்பில் தமிழகத்தில் பட்டியல் சமூகமக்களுக்கு எதிராக இழைத்துவரும் கொடுமையான தி.மு.க கொடுங்கோல் ஆட்சிக்கு எதிராகவும் மத்திய அரசு பட்டியல் சமூக மக்களுக்கு ஒதுக்கப்படும் நிதி மற்றும் நலத்திட்ட உதவிகளை மற்ற திட்டங்களுக்கு திசை…

ஈஸ்டர் திருநாளை முன்னிட்டு கிறிஸ்தவர்கள் சாம்பல் புதனுடன் தவக்காலம் துவங்கியது:-

கிறிஸ்தவ மதத்தினர் ஈஸ்டர் திருநாளுக்கு முன்பு கிறிஸ்தவர்கள் கடைப்பிடிக்கும் தவக்காலம் பிப்ரவரி 18ம் தேதி சாம்பல் புதன் திருநாளுடன் தொடங்கியது. இந்த தவக்காலத்தின் கடைசி ஞாயிற்றுக்கிழமை குருத்து ஞாயிறு திருநாளாக கடைப்பிடிக்கப்படுகிறது. இந்நிலையில் திருச்சி பொன்மலை புனித சூசையப்பர் ஆலயத்தில் இன்று…

திருச்சி NIT-ல் பிரக்யான் சர்வதேச தொழில்நுட்ப மேலாண்மை விழா கண்காட்சி – இயக்குநர் அகிலா பேட்டி:-

திருச்சி தேசிய தொழில்நுட்பக் கழகத்தில் (NIT), வரும் பிப் 19 ஆம் தேதி முதல் பிப் 22 ஆம் தேதி வரை ‘பிரக்யான்’ என்ற தொழில்நுட்ப கண்டுபிடிப்புகளின் கண்காட்சி மற்றும் போட்டி நடைபெற உள்ளது. இது குறித்து தேசிய தொழில்நுட்பக் கழகத்தின்…

கோரிக்கைகளை நிறைவேற்றாத திமுக அரசை கண்டித்து பல்வேறு இடங்களில் பார்வையற்றோர் 300-க்கும் மேற்பட்டோர் திடீர் சாலை மறியல் போராட்டம் :-

திருச்சிராப்பள்ளி பார்வையற்றோர் சங்கங்களின் கூட்டு நடவடிக்கை குழுவைச் சேர்ந்த 300-க்கும் மேற்பட்டோர் கடந்த இரண்டு நாட்களாக திருச்சி ஆட்சியரகம் முன்பாக இன்று உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டுவந்தனர். இந்த போராட்டத்தின் கோரிக்கைகளாக அனைத்து துறைகளிலும் பார்வையற்றோர்களுக்கு வேலைவாய்ப்பு வழங்கிட தடையாக இருக்கும் அரசாணை…

திருச்சியில் இரவு தூய்மைப் பணியாளர்களுக்கு உணவுத் திட்டத்தை அமைச்சர் அன்பில் மகேஸ் துவக்கி வைத்தார்:-

மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சிகளில் பணிபுரியும் துப்புரவு பணியாளர்கள் பயன்பெறும் வகையில் தமிழக அரசின் சார்பில் இன்று காலை உணவு வழங்கும் விழாவானது தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்களால் துவக்கி வைக்கப்பட்ட நிலையில் திருச்சி திருவெறும்பூர் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட மாநகராட்சி மண்டலம் 3ல்…

கூட்டணி குறித்து இறுதி முடிவை தவெக தலைவர் விஜய் அறிவிப்பார் – அறிக்கை குழு தலைவர் அருண் ராஜ் திருச்சியில் பேட்டி:-

தமிழக வெற்றி கழகத்தின் மத்திய மண்டலத்திற்கான தேர்தல் அறிக்கை தயாரிப்பு குழு கூட்டம் திருச்சி மன்னார்புரத்தில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் இன்று நடைபெற்றது. இந்த கூட்டத்திற்கு தலைமை நிர்வாகி அருள்ராஜ் தலைமையில் JCD பிரபாகரன், ராஜ்மோகன், மயூரி, பேராசிரியர் சம்பத்குமார்,.…

தற்போதைய செய்திகள்