திருச்சியில் தமிழக ஏரி மற்றும் ஆற்றுப் பாசன விவசாய சங்கத்தின் மாநில செயற்குழு கூட்டம் மாநிலத் தலைவர் பூரா.விஸ்வநாதன் தலைமையில் இன்று நடைபெற்றது. இந்த கூட்டத்தில் பல்வேறு மாவட்டங்களை சேர்ந்த நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

 

கூட்டத்தை தொடர்ந்து செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த மாநிலத் தலைவர் பூரா.விஸ்வநாதன் கூறுகையில்.

தமிழகத்தில் வரும் 27ஆம் தேதி நடைபெற உள்ள மத்திய அரசுக்கு எதிரான பாரத் பந்தில் 3 வேளாண் சட்டத்தை திரும்ப பெற வலியுறுத்தி நடக்கும் போராட்டத்தில் தமிழக ஏரி மற்றும் மாற்று விவசாய சங்கத்தின் சார்பில் மாநிலத் தலைவர் பூரா.விஸ்வநாதன் தலைமையில் சென்னையில் உள்ள எக்மோர் ரயில் நிலையத்தை முற்றுகையிட்டு ஆர்ப்பாட்டம் நடத்த தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. தமிழக விவசாயிகளின் வற்புறுத்தலின் பேரில் தமிழக முதல்வர் தலையிட்டு கர்நாடக முதல்வருடன் பேசி தற்போது தமிழகத்தில் நடந்து வரும் குறுவை சாகுபடி மற்றும் நடைபெறவுள்ள சம்பா சாகுபடிக்கு தேவையான 30 டிஎம்சி தண்ணீரை கூடுதலாக பெற்றுத் தர வேண்டும் என்ற கோரிக்கையை முன் வைத்துள்ளனர். அதேபோல் மோடி அரசு கொண்டுவந்துள்ள 3 புதிய வேளாண் சட்டங்களின் மூலம் விவசாயிகளின் நிலத்தை பிடுங்கி கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு துணைபோவதாக இந்த சட்டம் இருக்கிறது. மேலும், இலவச மின்சார திட்டத்திற்கு பைசா வசூல் செய்வதாக செய்திகள் வருகிறது. எனவே, மின்சார திருத்த சட்டத்தை உடனே திரும்பப் பெற வேண்டும். 3வேளாண் சட்டங்கள், மின்சார திருத்த சட்டத்தை திரும்ப பெறும் வரை தொடர்ந்து நாங்கள் போராட்டத்தில் ஈடுபடுவோம் என தெரிவித்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *