ஜனநாயகத்திற்கு எதிராகவும் அரசியலமைப்புக்கு எதிராக மூன்று புதிய குற்றவியல் சட்டங்களை எதிர்த்து திமுக சட்டத்துறை சார்பில் திருச்சி ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகம் முன்பு கண்டன ஆர்ப்பாட்டம் இன்று நடைபெற்றது. இந்த கண்டன ஆர்ப்பாட்டத்திற்கு திருச்சி மத்திய மாவட்ட திராவிட முன்னேற்றக் கழக வழக்கறிஞர் பிரிவு மாவட்ட பொறுப்பாளர் வழக்கறிஞர் ஓம் பிரகாஷ் தலைமை தாங்கினார். ஜாக் கமிட்டி பொதுச்செயலாளர் வழக்கறிஞர் பன்னீர்செல்வம், திமுக தெற்கு மாவட்ட அமைப்பாளர் வழக்கறிஞர் தினகரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மேலும் இந்த கண்டன ஆர்ப்பாட்டத்தில் திமுக மகளிர் வழக்கறிஞர் பிரிவினர், முசிறி, துறையூர், மணப்பாறை மற்றும் லால்குடி ஆகிய பகுதிகளை சேர்ந்த திமுக வழக்கறிஞர் பிரிவினர் இந்த ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்றனர்.

அவரைத் தொடர்ந்து திருச்சி மத்திய மாவட்ட திராவிட முன்னேற்றக் கழக வழக்கறிஞர் பிரிவு மாவட்ட பொறுப்பாளர் ஓம் பிரகாஷ் நிருபர்கள் அளித்த பேட்டியில் கூறியதாவது :- இந்த மூன்று புதிய குற்றவியல் சட்டங்களை ரத்து செய்ய வலியுறுத்தி தமிழக முதல்வரிடம் மனு அளிக்கப் பட்டுள்ளது மேலும் அனைத்து முதல்வர்களிடமும் இது சம்பந்தமாக மனு அளிக்கப்பட்டுள்ளது. மீண்டும் பாராளுமன்றத்தை கூட்டி இந்த புதிய மூன்று சட்டங்களை ரத்து செய்ய வேண்டும்.

 மேலும் நாளை சென்னையில் தமிழகத்தில் இருந்து அனைத்து வழக்கறிஞர்கள் பங்குபெறும் மாபெரும் உண்ணாவிரதப் போராட்டம் நடைபெறுகிறது. அதனைத் தொடர்ந்து எட்டாம் தேதி திருச்சியில் அனைத்து வழக்கறிஞர்கள் பங்குபெறும் மாபெரும் பேரணி போராட்டம் நடைபெற உள்ளது இந்த போராட்டங்களை தொடர்ந்து இந்த மூன்று புதிய சட்டங்களும் ரத்து செய்யப்படவில்லை என்றால் தொடர் போராட்டங்கள் நடைபெறும் என தெரிவித்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *