அதிமுகவின் 52 ஆம் ஆண்டு தொடக்க விழாவை முன்னிட்டு திருச்சி மாநகர், மாவட்ட அ.தி.மு.க சார்பில் திருச்சி மரக்கடை எம்.ஜி.ஆர் திடல் அருகில் பொதுக்கூட்டம் நடைபெற்றது கூட்டத்திற்கு காந்தி மார்க்கெட் பகுதி செயலாளர் சுரேஷ்குப்தா தலைமை தாங்கினார். வட்டச் செயலாளர் கயிலை கோபி வரவேற்று பேசினார்.கூட்டத்தில் திருச்சி மாநகர், மாவட்டஅதிமுக செயலாளர் சீனிவாசன், அமைப்பு செயலாளர் ரத்தினவேல், முன்னாள் அமைச்சர் ராமசாமி, பேரவை இணை செயலாளர் பிரபு தலைமை கழக பேச்சாளர் நாகராஜ், மாவட்ட ஜெயலலிதா பேரவை செயலாளர் கார்த்திகேயன் ஆகியோர் சிறப்புரை ஆற்றினார்கள்.

கூட்டத்தில் மாவட்ட துணை செயலாளர்கள் வனிதா, மாவட்ட இளைஞர் அணி செயலாளர் சிந்தாமணி முத்துக்குமார்,பகுதி செயலாளர்கள் எம்.ஆர்.ஆர்.முஸ்தபா, ஏர்போர்ட் விஜி, கவுன்சிலர்கள் கோ.கு.அம்பிகாபதி,அரவிந்தன், முன்னாள் துணை மேயர் மரியம் ஆசிக், நிர்வாகிகள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். கூட்டத்தில் பொது மக்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

தற்போதைய செய்திகள்