தமிழ்நாடு பட்டதாரி முதுநிலை பட்டதாரி ஆசிரியர் கழகம் மாநில செயற்குமு கூட்டம் திருச்சி ஆசிரியர் இல்லத்தில் மாநிலத் தலைவர் மகேந்திரன் தலைமையில் நடைபெற்றது கூட்டத்தில் மாநில பொதுச் செயலாளர் சுந்தரமூர்த்தி மற்றும் மாநில பொருளாளர் துரைராஜ் ஆகியோர் வானிலை வைத்தனர் கூட்டத்தில் மாநில சிறப்பு தலைவர் சுப்பிரமணியன் உள்ளிட்ட மாநில நிர்வாகிகளும் பல்வேறு மாவட்டங்களை சேர்ந்த மாநில செயற்குழு உறுப்பினர்களும் கலந்து கொண்டனர்.

கூட்டத்தில் பள்ளி துணை ஆய்வாளர் பணியிடங்களை உயர்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் பணியிடமாக மாற்றி அமைக்க வேண்டும்.தற்போது நடைமுறையில் உள்ள பங்களிப்புடன் கூடிய ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்துவிட்டு பழைய ஓய்வு திட்டத்தை நடைமுறைப்படுத்த வேண்டும்.

கால வரையின்றி முடக்கப்பட்டுள்ள சரண் விடுப்பை உடனடியாக விடுவித்து ஒப்படைப்பு செய்து பணமாக்கிக் கொள்ள ஆணை பிறப்பிக்க வேண்டும். 6ம் வகுப்பு முதல் 10ம்வகுப்பு வரை குறைந்தது 8 பட்டதாரி ஆசிரியர் பணியிடங்களை உருவாக்கி ஆணை பிறப்பிக்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *