இந்திய நாட்டின் 75வது சுதந்திர தினவிழா வருகின்ற ஆகஸ்ட் 15ம் தேதி இந்தியா முழுவதும் கொண்டாடப்படுகிறது. இதனையொட்டி இந்தியாவில் உள்ள அனைத்து மாநிலங்களிலும் அந்த அந்த மாநில முதல்வர்கள் தேசியக் கொடியை ஏற்றி வைப்பார்கள். அதன்படி தமிழகத்தில் திமுக தலைவரும், தமிழக முதல்வருமான மு க ஸ்டாலின் முதன் முறையாக கோட்டையில் தேசியக் கொடியை ஏற்றி வைக்க உள்ளார்.

அதனைத் தொடர்ந்து அனைத்து மாவட்டங்களிலும் மாவட்ட கலெக்டர்கள் கொடி ஏற்றுவார்கள். மேலும் அனைத்து அரசு அலுவலகங்கள், கோர்ட், கட்சி அலுவலகங்கள் போன்றவற்றிலும் தேசிய கொடியை ஏற்றிவைத்து சுதந்திர தினவிழா கொண்டாட்டங்கள் நடைபெறும்.

 

அதன் ஒரு பகுதியாக திருச்சி சுப்பிரமணியபுரம் ஆயுதபடை மைதானத்தில் வருகிற ஆகஸ்ட் 15-ம் தேதி சுதந்திர தின விழா நடைபெறுவதையொட்டி போலீசாரின் துப்பாக்கி ஏந்திய அணிவகுப்பு ஒத்திகை இன்று நடந்தது. இதில் மாநகர காவல்துறையினர், போக்குவரத்து காவல் துறையினர், தீயணைப்புத்துறையினர் உள்ளிட்டோர் துப்பாக்கி ஏந்தி அணிவகுப்பு ஒத்திகையில் ஈடுபட்டனர்.

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *